கரூர் மாவட்டம்:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு செல்லாண்டி அம்மன் கோயில்களில், மூன்று தலைமுறைகளாக பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. திருவிழாக் காலங்களில் கூட இவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இத்தகைய சமூக அநீதி குறித்து, அக்கிராம மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு புகார் அனுப்பியதன் அடிப்படையில், முதலமைச்சர் உடனடியாகக் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, தீண்டாமையை ஊக்குவித்த கோயில் நிர்வாகக் குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாத கால தொடர் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்புடன், பட்டியலின மக்கள் மாவிளக்கு எடுத்துச் சென்று கோயிலுக்குள் அம்மனை வழிபாடு செய்தனர். முந்தைய காலங்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகளின்போது, சட்டம்-ஒழுங்கு சிக்கலைக் காரணம் காட்டி கோயில்கள் பூட்டப்பட்ட சம்பவங்கள் நடந்த நிலையில், இப்போதைய அரசு சமூக நல்லிணக்கத்தைச் சிறப்பாக கையாண்டு வழிபாட்டு உரிமையை மீட்டுத் தந்துள்ளதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். “தேங்க்யூ சிஎம் சார்” என மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த இந்த நிகழ்வு, சமூக நீதியைப் பேணுவதில் தவெக அரசு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
#DalitRights #TempleEntry #TvkGovernment #Vijay #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SocialJustice #Politics2026 #Karur #Equality #TamilNaduPolitics #CommunityHarmony #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #Assembly #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #HumanRights #AdministrativeReform #GovernmentAccountability #SocialEquality #PublicRepresentation #Justice