செம்மணி உள்ளிட்ட சகல மனிதப்புதைகுழிகளிலும் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுகள் குறித்து ஐ.நாவுக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்

செம்மணி உள்ளிட்ட சகல மனிதப்புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசக் கண்காணிப்புடனான சுயாதீன விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெள்ளிக்கிழமை (19) செம்மணி மனிதப்புதைகுழியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதியையும் கண்காணிப்பையும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களான நாம், பின்வரும் விடயங்களை உங்களது உடனடிக் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

இலங்கையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் கடந்திருக்கும் போதிலும், எந்தவொரு பொறிமுறையின் ஊடாக எமக்கான உண்மையும், நீதியையும் நிலைநாட்டப்படவில்லை. நீதிக்காகப் போராடி 400 க்கும் மேற்பட்ட தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாமும் உயிரிழப்பதற்குள் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கும், அவர்கள் எங்கே என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கும் சுயாதீனமானதும், நம்பகமானதுமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறும், அதனை முன்னிறுத்தி சர்வதேச சமூகம் அவசியமான தலையீட்டை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அண்மையில் நீதியமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்துக்களை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். மாறாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். உண்மை கண்டறியப்படவேண்டும். நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உண்மை மற்றும் நீதிக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும் அரசாங்கமானது இழப்பீடு வழங்கல், மரணச்சான்றிதழ் வழங்கல் மற்றும் ஏனைய நிர்வாக நடவடிக்கைகள் மூலம் வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தை மூடிமறைக்க முற்படுவதுபோல் தெரிகிறது. இழப்பீடு ஒருபோதும் நீதிக்கு ஈடாகாது. உண்மை வெளிப்படுத்தப்படாமல் வழங்கப்படும் எந்தவொரு இழப்பீடும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குரிய நீதிப் பாதுகாப்புக்கான உரிமையை மறுப்பதாகவே அமையும்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் என்பவற்றுக்கு ஒதுக்கப்படும் வளங்கள், உண்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்குப் பதிலாக, வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தை மூடிமறைப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து மிகுந்த கவலையடைகிறோம்.

அதேபோன்று இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையில் பேணப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாக அநுராதபுரத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பது தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. மறுபுறம் தமது பாரம்பரிய நிலங்களைப் பாதுகாக்க முயன்ற தமிழ் மதத்தலைவர்கள் பாதுகாப்புப்படையினரால் அவமதிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அதேவேளை பயங்கரவாதத்டைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், தற்போது அதற்குப் பதிலாகப் புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முற்படுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

மேலும் செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 380 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய ஆதாரங்களாகும். இவ்வாறானதொரு பின்னணியில் உள்நாட்டு விசாரணைகள் மீது எமக்கு எவ்வித நம்பிக்கையுமில்லை. மாறாக சர்வதேசக் கண்காணிப்புடன்கூடிய நம்பகமான தடயவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது