சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகள் தமிழர் பகுதியில் அதிகரிக்கிறன!

இலங்கை முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து விட்டன. இது போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(19.06.2026) ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 17 ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் தன்னுடைய 12 வயது மகளை ஆண் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்திய காரணத்தால் அவர் அவமானம் தாங்க முடியாது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இது இலங்கை தேசத்துக்கு ஒரு பரிதாபகரமான செயலாக பார்க்கப்படுகிறது.

இதனை தடுக்காவிட்டால் சிறுவர் துஷ்பிரயோகத்தால் அந்த சிறுவர் மட்டுமல்ல அவரது பெற்றோர், உறவினர்கள் உட்பட அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான குற்றச் செயலை தடுப்பதற்கு அதி உச்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்.

அத்துடன், அந்தந்த பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் பிரஜாசக்தி தலைவர்கள், அந்த ஊரில் இருக்கும் தேவாலயங்கள் ஆலயங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து கூடிய கவனம் செலுத்தி இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாய் தந்தை தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அல்லது தாய் இல்லாமல் தந்தையுடனும் தந்தை இல்லாது தாயுடனும் 18 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு இல்லாத சிறுவர்கள் இருக்கின்றனர்.

எனவே, இவர்களுடைய பாதுகாப்பில் கருத்தில் கொண்டு கிராம உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசத்தி உறுப்பினர்கள், கூடுதல் கவனம் செலுத்தி இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் பெண்களை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர்கள் உள்ளிட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்காக தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்