முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடி ஆய்வு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று (16.06.2026) முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள வளக்குறைபாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தரவு சேகரிப்புகளின் தொடர்ச்சியாக மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது, மருத்துவமனையின் அமைவிடம், கட்டிட வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள் நேரடியாக பார்வையிடப்பட்டதுடன் மருத்துவப் பொறுப்பதிகாரியுடன் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவமனைகளின் குறைபாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நோக்கில், 17.09.2025 அன்று வள மேம்பாட்டு தரவு கோரல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு 02.04.2026 அன்று கிடைத்த பதிலில், முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது குறித்த மருத்துவமனை தற்காலிக கட்டடத்தில் இயங்கிவருவதுடன், நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவு, பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்கான தேவை இருந்தபோதிலும் இடவசதி பற்றாக்குறை காரணமாக வினைத்திறனான சேவையளிப்பில் சவால்கள் நிலவுவதாக மருத்துவப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் 7,575 வெளிநோயாளர்களும் 751 தொடர் சிகிச்சை (Clinic) நோயாளர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர். மாத சராசரியாக 700 நோயாளர்கள் வருகை தந்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 3708 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இம்மாதம் 15ஆம் திகதி வரை 445 பேர் வருகை தந்துள்ளனர்.
மேலும், விடுதி வசதிகளுடன் இயங்க வேண்டிய இம்மருத்துவமனை தற்போது வெளிநோயாளர் சேவையுடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்குவதால், நீண்டகால சிகிச்சை, தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் நோயாளர் கண்காணிப்பு போன்ற தேவைகளில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில், அனுமதிக்கப்பட்ட 13 பணியிடங்களில் தற்போது மருத்துவப் பொறுப்பதிகாரி ஒருவரும் இரு பணியாளர்களுமாக (Labourer) மொத்தம் 03 பேர் மட்டுமே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பதிலீடு இன்றி விடுவிக்கப்பட்ட சுதேச மருத்துவர்களுக்கான பணிவெற்றிடங்கள் மிகவிரைவில் நிரப்பப்படும் என சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கடந்த 2026.06.03 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளதாக ரவிகரன் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நிரந்தர இடவசதி ஏற்படுத்தும் நோக்கில் மாற்றுக் காணி ஒதுக்கீடு தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடுவதாகவும் மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்த தேவையான ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு வளங்களைப் பெற உரிய மட்டங்களில் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்
722285981_2974934642676934_8257833288764805919_n

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக!-கொழும்பில் போராட்டம்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர

722285981_2974934642676934_8257833288764805919_n

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக!-கொழும்பில் போராட்டம்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர

718100400_1688279049969282_6603632696709700270_n

முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடி ஆய்வு

June 16, 2026

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று (16.06.2026) முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நேரில்

court-judge-hammer-gavel-696x398

யோஷித ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணை நிறைவு; ஜூலை 3ஆம் திகதி தீர்ப்பு

June 16, 2026

பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள “சதி” (Conspiracy)

Gotabaya-Rajapaksa

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான் கைதாகக் கூடாது – முன்னாள் ஜனாதிபதி கோட்டா மனு

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA)

vasu11111111111

சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

June 16, 2026

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது.

acci main

ஹட்டன் – கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

June 16, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100

Yoshitha-Rajapaksa (1)

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

June 16, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch

1200-675-26926160-thumbnail-16x9-madurai

சாத்தான்குளம் வழக்கு! – மேல்முறையீட்டு மனுவிற்கு ஸ்ரீதர் தரப்பிற்கு நீதிமன்றம் அவகாசம்!

June 16, 2026

மதுரை: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய

2

“தவெக-வில் இணையறீங்களா?” – இரட்டை இலையைக் காட்டி செல்லூர் ராஜூ மாஸ் பதில்!

June 16, 2026

மதுரை: மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சைகை அரசியல்

1

“என்ன செய்கிறது சிங்கப்பெண்கள் படை?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

June 16, 2026

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட

Malcolm-Cardinal-Ranjith

அருட்தந்தை சிறில் காமினி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – இரத்தினபுரி போதம்ம தேரர்

June 16, 2026

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை