வவுனியா – வைரவப்புளியங்குள தனியார் தாதியர் கல்லூரியில் பணியாற்றிய ஐவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம், 7ஆம் ஓழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் நேற்று(15.06.2026) குழப்பநிலை ஒன்று ஏற்பட்டமையால் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் தனியார் தாதியர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கீகாரமுள்ள சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கல்லூரியின் பணிக்குழுவுக்கும் மாணவர்களுக்கும் இடையில் குறித்த வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது உடனடியாக எமக்கு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் இல்லாவிடில் நாம் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்துமாறு மாணவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அதற்கு பொறுப்பான பதிலை கல்லூரி நிர்வாகிகள் வழங்கவில்லை. இதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் கல்லூரியில் கடமை புரிபவர்கள் எனக் கூறப்படும் ஐவரை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைக்களுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடியதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

காரணமின்றி கைது செய்ய முடியாது’ – நீதிமன்றில் கோட்டாபயவின் சட்டத்தரணி வாதம்

June 18, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி

police11

ஒரோரா கொலைச் சம்பவம்: ஆறு பேருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது

June 18, 2026

ஒரோரா கொலைச் சம்பவம்: ஆறு பேருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது ஒரோரா, ஒன்ராறியோ (AURORA, ON)

police 15

கல்பிட்டியில் பொலிஸார் – விமானப் படையினரிடையே மோதல் : விசாரணை ஆரம்பம்

June 18, 2026

கல்பிட்டி கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையொன்றின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் இலங்கை விமானப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான

court-judge-hammer-gavel-696x398

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

June 18, 2026

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் நிமித்தம் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும்

722754513_1009596868216954_8526706588502068281_n

மணல் கிரவல், அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் .

June 18, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் மணல், கிரவல் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ

725568727_1534899634701951_2195149266527445420_n

கலைகளை வளர்ப்பதற்கு கலைஞர்களுக்கு களமும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

June 18, 2026

யாழ் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்

teldeniya-hospital

நுவரெலியா கொலைச் சம்பவம்: காணாமல் போன பெண் வைத்தியர் தெல்தெனியவில் காரினுள் சடலமாக மீட்பு

June 18, 2026

நுவரெலியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவரின் சடலம், கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த

suresh s wife1

சுரேஷ் எந்தக் காரணமும் இன்றி துன்புறுத்தப்படுகின்றார்: எலிகள் நிறைந்த சிறிய அறையின் தரையில் தூங்குகிறார் – மனைவி மனோரி சலே

June 18, 2026

“எலிகள் நிறைந்த 6×4 அடி அளவுள்ள சிறிய அறையின் தரையில் தூங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதையடுத்து, இன்று அவருக்கு அதிக

teldeniya-hospital

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரில் பெண் சடலமாக மீட்பு: பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டனர்

June 18, 2026

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறித்து, கடந்த புதன்கிழமை மாலை கிடைக்கப்பெற்ற

United-National-Party-UNP-6

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை: அமெரிக்க FBI ஆவணங்களை அரசாங்கம் கோரியதா? ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

June 18, 2026

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா நடத்திய புலனாய்வு விசாரணைகளின் ஆவணங்களை, இலங்கை அரசாங்கம்

sugee

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

June 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் (Private Secretary) பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்

chemmani 16

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு

June 18, 2026

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அவர்களினால்