கடலூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அசுர வேகத்தில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார். ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கத் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும். தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் இத்திட்டத்திற்குத் தவெக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது எனச் சீமான் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.
#Seeman #NaamTamilarKatchi #NTK #Cuddalore #Parangipettai #HydrocarbonProject #EnvironmentalProtection #SaveFishermen #TamilNadu #Vijay #ThalapathyVijay #TvkGovernment #TNPolitics #EnvironmentPollution #MarineLife #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SaveEnvironment #TamilNaduNews #SeemanSpeech #PollutionControl #HydrocarbonIssue #Politics2026