முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ஊழல் வழக்குகளிலும், அவருக்கு தலா நான்கு ஆண்டுகள் வீதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் (Mohamed Mihail), இந்த வழக்குகளுக்காக மொத்தம் 1.8 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் (Development Lotteries Board) தலைவராகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே குணவர்தன குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
அவர் தலைவராக இருந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்றும், இதன் மூலம் அவர் ஊழல் குற்றத்தைச் புரிந்துள்ளார் என்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியிருந்தது.