முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தால் ஏற்படும் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார். எனவே நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியின் அனுபவமிக்க அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய பல்துறைசார் நிபுணத்துவக் குழுவொன்றை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டும் என சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எரிபொருள்; விலையைக் குறைத்துள்ளன. ஆனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியமை, தரம் குறைந்த நிலக்கரி மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை போன்ற கின்னஸ் சாதனைகள் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையே சேரும்.

பெப்ரவரி 28 முதல் மே 31 வரையிலான காலப்பகுதியில், உலகிலேயே மிக அதிக சதவீதத்தில் டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரித்திருப்பது இலங்கை அரசாங்கமாகும். இதன் மூலம் டீசல் 13.9 சதவீதத்தாலும், பெற்றோல் 127.6 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தியுள்ளன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திலுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட எரிபொருள்; விலையைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு அதன் பலனை வழங்கியுள்ளன.

ஈரான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே எரிபொருள்விலை அதிகரித்தது என்று அரசாங்கம் கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும். தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட சுமார் 100 பில்லியன் டொலர் இழப்பு, அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மின்வெட்டை முகாமைத்துவம் செய்ய முயன்றதால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணங்களாகும்.

உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை இதனாலேயே ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருளை மாத்திரமே எம்மால் சேமிக்க முடியும் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் அதற்கு முந்தைய வாரங்களில் உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைவாக இருந்த போது ஏன் விலையைக் குறைக்கவில்லை? எனவே, ஜனாதிபதிக்கோ அல்லது மின்சக்தி அமைச்சருக்கோ எரிபொருள்விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்தவொரு புரிதலும் இல்லை.

தற்போது அரசாங்கம் சில நிறுவனங்களின் மாஃபியாக்களிடம் சிக்கியுள்ளதுடன், அதிக விலைக்கு எரிபொருள்; வாங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. காஞ்சன விஜேசேகர அமைச்சராக இருந்தபோது நிறுவனங்களின் தரகுப் பணம் அவரது சட்டைப் பைகளுக்குள் செல்வதாக ஜனாதிபதி கூறினார். தற்போது அந்த சட்டவிரோத இலாபம் யாருடைய சட்டைப் பைக்கு அல்லது எந்தக் கணக்கிற்குச் செல்கிறது என்பதை ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அடுத்த கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் விலை மற்றும் வரிகளை அதிகரிக்க உடன்பாட்டை தெரிவித்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதியும் மத்திய வங்கி ஆளுநரும் கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் அரசாங்கம் நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்துள்ளது. நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சரியான பார்வையான திறமையோ இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார். நிலைமையைச் சரியாகக் கையாண்டிருப்பார். மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாம் தற்போது பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் அதனை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னாயத்தங்களை இன்னும் மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை. அன்றாட நிலைமைக்கு ஏற்பவே தற்காலிகமாகச் செயற்படுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி இதற்குப் பொருத்தமான ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சியில் இருக்கும் அனுபவமிக்க அரசியல் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைக் கையாள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய