தடைசெய்யப்பட்ட தமிழீழ வரைபடம், கொடிகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

இலங்கையின் போர் வெற்றி நாளை, இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என்றும், அதற்கு எதிராக தங்களது கட்சி கடுமையாக போராடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு,

“யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வது தொடர்பில் எமக்கும் கவலை உள்ளது, மக்களின் அந்த நினைவேந்தல் உரிமையை நாம் மதிக்கின்றோம்.

ஆனால், அண்மையில் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் நினைவேந்தல் என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட தமிழீழ வரைபடம், கொடிகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டு தான் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எமது முப்படையினர் தங்களது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த இந்த ஒற்றையாட்சி நாட்டில், பயங்கரவாத அடையாளங்களுடன் இவ்வாறு நினைவேந்தல்களை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

நாடாளுமன்றத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகி வந்துள்ள சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களைப் பேசி வருகின்றனர். அவர்கள் இத்தகைய இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

தற்சமயம் அவர்கள், இலங்கையின் போர் வெற்றி நாளை இனப்படுகொலை தினமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டின் ஒற்றையாட்சி அரசமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறியே இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவ்வாறிருக்கையில், இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை தினத்தைப் பிரேரிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இத்தகைய தேசவிரோதப் பிரகடனங்களுக்கு நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் கூட்டு எதிரணியாகத் தங்களது கட்சி மிகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANURA PARL

சுரேஸ்சாலேயின் தாயாரும் அனுரவிற்கு கடிதம் எழுதினார்-

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார்

suresh11

சுரேஸ் சாலேக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக

778972206_1621427252686601_4469929818179508992_n

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

August 24, 2026

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம்

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்