32ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை முறியடிப்பு

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்.

’14 பீக்ஸ் எக்ஸ்பெடிஷன்’ நிறுவனத்தின் ஊடாக வருகை தந்த மலையேற்றக் குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற 56 வயதான காமி ரீட்டா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) முற்பகல் 10:12 மணியளவில் 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

காமி ரீட்டாவின் இந்த ‘வரலாற்று மைல்கல்’ சாதனையைப் பாராட்டியுள்ள நேபாள சுற்றுலாத்துறை திணைக்களம், சர்வதேச மட்டத்தில் நேபாளத்தின் மலை உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பிட்டுள்ளது.

காமி ரீட்டா செர்ப்பா முதன்முதலில் 1994ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார்.

2014, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதைத் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் அவர் சிகரத்தை ஏறியுள்ளார். சில ஆண்டுகளில் இரண்டு முறை கூட சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் 1953 இல் வென்ற டென்சிங் நோர்கேயின் அதே ‘தாமே’ கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 52 வயதான நேபாள செர்ப்பா பெண்மணியான லக்பா (Lhakpa Sherpa) நேற்று தனது 11ஆவது எவரெஸ்ட் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறிய பெண் என்ற தனது சொந்த உலக சாதனையை அவரும் நீடித்துள்ளார்.

செர்ப்பா அல்லாத வெளிநாட்டு மலையேறுபவர்களில், பிரித்தானிய வழிகாட்டியான கென்டன் கூல் 19 முறைகளும், அமெரிக்க வீரர்களான டேவ் ஹான் மற்றும் காரெட் மேடிசன்ஆகியோர் தலா 15 முறைகளும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளனர்.

தற்போதைய மார்ச்-மே மாத மலையேற்றக் காலப்பகுதிக்காக நேபாள அரசு 492 அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ள நிலையில், நடப்பு மாதத்தில் மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளமை மலையேற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்