மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கை செய்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த வீட்டிற்குள் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் ஊடாக நுழைய முடியும் என்ற போதிலும், சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்ததில் 2026ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதிக்கும் 2026ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநபர்கள் எவரும் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, இறந்துபோனவர் வசித்து வந்த வீட்டிலிருந்த சிசிடிவி உபகரணங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அந்த சிசிடிவி உபகரணங்களிலும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீதவான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொலிஸார், மரணமடைந்தவர் வசித்து வந்த வீட்டிலும், மரணம் சம்பவித்த வீட்டிலும் இருந்த சிசிடிவி கெமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர் இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மரணமடைந்தவர் வசித்த வீடு மற்றும் மரணம் சம்பவித்த வீடு ஆகியவற்றின் சி.சி.டி.வி கெமரா கட்டமைப்புக்குரிய டி.வி.ஆர் இயந்திரங்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து, அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம்​சமர்ப்பித்து அறிக்கை கோருவதற்கு அனுமதி வழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து வகைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றில் அடையாளம் தெரியாத இரு வேறு வகையான மருந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதில் ஒரு வகையான மாத்திரைகள் 9ம், மற்றுமொரு வகையான மாத்திரைகள் 11ம் இருந்ததாகவும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து விபரித்த பொலிஸார், மரணமடைந்தவருக்கும் வீட்டின் பணியாளர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள கடந்த தினத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்த போதிலும், போதிய கால அவகாசம் இன்மையால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், அதனால் மீண்டும் சத்தியக்கடதாசிகளைச் சமர்ப்பித்து அதற்கான உத்தரவுகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீதவான் பொலிஸாரிடம், “இந்த சாட்சி விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பொலிஸார், “அவர்களிடம் இன்னும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனது” எனத் தெரிவித்தனர்.

மீண்டும் பொலிஸாரை நோக்கி நீதவான், “வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்பதற்காக சாட்சிகளை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையே முதலில் சாட்சியமளிக்க அழைக்க வேண்டும். வாக்குமூலங்களைப் பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அச்சமயம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி, “இந்த இரு பிணையாளர்களும் விளக்கமறியலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதவான், “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் அல்லவே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் இலகுவானதே. என்னிடம் இருந்து உத்தரவொன்றைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்ய முடியும்” என்று கூறினார்.

இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காகப் பல சாட்சிகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அழைத்திருந்தனர்.

அது குறித்து கருத்துத் தெரிவித்த நீதவான், “இன்று சாட்சியமளிப்பதற்காகப் பல பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரினதும் சாட்சியங்களை இன்று பதிவு செய்ய முடியாது. அவசியமற்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். சாட்சிகளுக்குள் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது” எனக் குறிப்பிட்டதுடன், இந்த மரணம் தொடர்பான சாட்சி விசாரணைகள் பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என