பத்தரமுல்லையில் ஜனாதிபதி தலைமையில் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம்

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட உயிர்நீத்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம், இன்று செவ்வாய்க்கிழமை (19) பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்முறை நிகழ்வுகளில் ஒரு விசேட மாற்றமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளுடன் இணைந்து பணியாற்றி உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்கு விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமது உயிரைத் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் கௌரவத்தைச் செலுத்தும் முகமாக ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய மாவீரர்கள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் இம்முறை 15 ஆவது முறையாக இந்நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்முறை நிகழ்வில் சில விசேட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்வில் அதிக வாய்ப்புகளை வழங்குவதே பிரதான நோக்கமாகும். எனவே, முன்னைய ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மற்றொரு முக்கிய விடயமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து முப்படைகளுடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கு இம்முறை விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்ட இத்தகைய குடும்பங்கள் விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து தமது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் கௌரவம் அளிக்கவும் விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாலை 3 மணிக்கு இந்த நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதுடன், விசேட அதிதிகள் மாலை 3:15 மணிக்குள் வருகை தரவுள்ளனர். தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என மொத்தம் 2,769 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

மாவீரர்களின் பெற்றோரைப் பொறுத்தவரை, இம்முறை சுமார் 160 பேருக்குப் பிரதான நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிகழ்வின் போது ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் விசேட அதிதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போது, அந்தந்தப் படைகளைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் அவர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை