கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுத்து கல்விளான் பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் வெள்ள நீர் உட்புகுவதால் அந்தப்பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் பலத்த பாதிப்புக்களுக்க முகங்கொடுத்துவந்தனர்.
இந்நிலையில் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுகின்ற கல்விளான் பகுதியைச் சேரந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் அந்த கல்விளான் பகுதியைச்சேர்ந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களே அந்தக் காணிகளையும், வீடுகளையும் தொடர்ந்து பயன்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.
அந்த கல்விளான் குடியிருப்பு அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு பொருத்தமற்ற இடம் என்பதற்காகவே, அந்த மக்களுக்களை வேறு இடங்களில் குடியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கு அந்த மக்களால் நடப்பட்ட பலந்தரு நீண்டகாலப் பயிர்களும், அந்தமக்களுக்கான பொருளாதார வளங்களும் உள்ளன. அனவே அந்தக்காணிகளையும், வீடுகளையும் அந்த மக்களே பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,
சுற்றுநிருபத்தின்படி அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகளிலுள்ள வீடுகள்ள இடித்ழிப்புச் செய்யப்படவேண்டும். மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியிருக்க முடியாது.
எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. எம்மால் அந்த வீடுகளை உடைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்படாது.
அவர்கள் அந்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அத்தோடு அந்த மக்களுக்ளுக்கு புதிதாக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு பிரதேச செயலகத்தால் எதிர்காலத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் பழையவீட்டில் இருக்கும்போது அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்குரிய நிவரணங்கள் எவற்றையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடுள்றது – என்றார்
699761571_27060087823620865_4783139409169234330_n

சுழிபுரம் பறாளாய் வயலில் மின்னல் தாக்கி மாணவன் பலி

May 14, 2026

இன்று மதியம் கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் சுழிபுரம் பறாளாய் வயலில் தனது தந்தையுடன் வேலை செய்துகொண்டிருந்த மாணவன்

698751647_2345591482594510_1734056233109631550_n

யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட விவகாரம் சட்ட ஆலோசனைக்குச் செல்லும் நிலையில்!

May 14, 2026

யாழ் நகர மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத் தொகுதியின் நிர்வாக உரிமை தொடர்பாக இலங்கை போக்குவரத்து

698751647_2345591482594510_1734056233109631550_n

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

May 14, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாக உரிமை யாழ்ப்பாண மாநகரசபைக்கே உரியது என்றும், அதன் ஆளுகையில் வெளிப்புற தலையீடுகள்

698751647_2345591482594510_1734056233109631550_n

உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்தல்

May 14, 2026

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலைகள், தரம் மற்றும் அளவுகள் தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு

Mu

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி

May 14, 2026

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை (14) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர

Era

ஐயங்கேணியில் கைக்குண்டு மீட்பு

May 14, 2026

ஏறாவூர், ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கி நிற்கும் இடமொன்றில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டதாக

cyber

இலங்கையில் காணாமல் போன 6.6 மில்லியன் டொலர் ஓமானில்?

May 14, 2026

ஆசிய நாடு ஒன்றில் இணையவழிக் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்தை ஓமான் பொலிஸார் மீட்டுள்ளதாக

default (15)

கனடா கிரிக்கெட் வாரியத்தின் நிதியை முடக்கியது ஐசிசி: 6 மாத காலக்கெடு விதிப்பு

May 14, 2026

கனடா கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல், நிதி முறைகேடு மற்றும் ஆட்ட நிர்ணயச் சதி (Match-fixing) புகார்கள் குறித்து ‘The

ravikaran11

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

May 14, 2026

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை

rain

இலங்கையில் சீரற்ற வானிலையினால் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

May 14, 2026

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த

IUSF-Basil-malwana-house

மல்வானையில் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘உரிமையாளர் அற்ற’ காணியை ஆக்கிரமித்ததுபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

May 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்

dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்