கனடியதமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை-கனடிய தமிழர் பேரவை

கனடியத்தமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள கனடிய தமிழர் பேரவை இலங்கையில் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சிகள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நிராகரித்துள்ளது.
கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையில் “பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக” மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார முயற்சிகள் குறித்துப் பரப்பப்படும் தவறான ஆதாரமற்ற தகவல்களைக் கனடியத் தமிழர் பேரவை முற்றிலும் மறுக்கிறது
கனடியத் தமிழர் பேரவை (CTC) இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் எங்களது பொருளாதார அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தீங்கிழைக்கும் தவறான தகவல்களை முற்றிலுமாக மறுக்கிறது.
வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையத்துடன் (NEED Centre) இணைந்து, கனடியத் தமிழர் பேரவை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிலையான பொருளாதாரத்தை உருவாக்கும் தனது பணியில் உறுதியாக நிற்கிறது.
இந்த முயற்சியின் முக்கிய அங்கமாகக், கனடியத் தமிழர் பேரவையின் நிதியுதவியில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி மையம் நடைமுறைப்படுத்தும் “முல்லைத்தீவில் தயாரானது” (Made in Mullaitivu) என்ற திட்டம், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் பொருளாதார சுதந்திரத்தைப் பெறவும், தங்கள் உற்பத்திகளை மேம்படுத்தவும் உதவும் ஒரு அர்ப்பணிப்பான தளமாகச் செயற்படுகிறது.
இதன் அடிப்படையில், “முல்லைத்தீவில் தயாரானது” (Made in Mullaitivu) என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக இரண்டு விற்பனை நிலையங்கள் மட்டுமே உள்ளன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஒரு விற்பனை நிலையம் முல்லைத்தீவு நகரத்தில் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இரண்டாவது முறிகண்டியில் (A9 வீதி) அமைந்துள்ள உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான காட்சிசாலை மற்றும் விற்பனை நிலையம் ஆகும்.
சமீபத்தில் பரவும் வதந்திகள், கனடியத் தமிழர் பேரவை “அங்கயற்கண்ணி” என்ற உணவகத்தைக் கையகப்படுத்தியதாகப் பொய்களைக் கூறுகின்றன.
“அங்கயற்கண்ணி உணவகம்” என்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் வேறோர் இடத்தில் அமைந்துள்ள முற்றிலும் வேறுபட்ட உணவகமாகும். கனடியத் தமிழர் பேரவைக்கும் இந்த “அங்கயற்கண்ணி” உணவகத்திற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை.
முறிகண்டி என்ற இடத்தில், உள்ள “முல்லைத்தீவில் தயாரானது (Made in Mullaitivu)” காட்சிசாலை, அரியாத்தை சைவ உணவகத்துடன் இடத்தைப் பகிர்ந்துகொள்கிறது. மற்றும் A9 வீதியில் சுத்தமான “கழிப்பிட வசதிகள்” சேவையை இயக்குகிறது. எனினும், இந்த “அரியாத்தை உணவகம்” சுயாதீனமாக இயங்குகிறது.
கனடியத் தமிழர் பேரவையும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி மையமும், “Made in Mullaitivu” என்ற உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிசாலை உள்ளடங்கிய விற்பனை நிலையத்துக்கு மட்டுமே பொறுப்பு. அந்த இடத்தில் இயங்கும் அரியாத்தை உணவகத்துடன் அவற்றுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அங்கயற்கண்ணி உணவகம் உட்பட அனைத்து அரியாத்தை உணவகங்களும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன.
பல வருட மூலோபாய திட்டமிடலாலும், நமது தாயகத்தில் உண்மையாக அக்கறை கொண்டவர்களின் கடும் உழைப்பினாலும் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சிலர் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்துகொண்டு இத்தகைய மக்கள் நலன்புரித் திட்டங்களை அழிக்கும் சொகுசுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்றவர்கள் தரையில் இறங்கி கடின உழைப்புடன் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
பொய்களைப் புனைந்து, உணர்ச்சி ஆட்ட உசுப்பேற்றலைப் பரப்புபவர்கள் எதையும் உருவாக்கும் பார்வையோ திறனோ இல்லாதவர்கள் என்பது தெளிவு.
அவர்களின் செயல்கள், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகச் சீர்குலைக்கும் முயற்சியாகும்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குச் சந்தை கிடைப்பது, வறிய குடும்பங்கள் நிலைத்தன்மை பெறுவது, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படுதல் போன்றவற்றால் துன்புறும் மக்களின் வாழ்க்கை மாற்றம் அடைவதை நேரில் காணும் தாக்கத்தால் நாங்கள் உந்தப்படுகிறோம்.
உரிய முடிவுகளே எங்களுக்குத் தேவையான ஒரே சான்று.
எமது சமூகத்தினர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பொய்யான கதைகள் உண்மையில் மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகள் என்பதை அடையாளம் காணுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறோம்.
கனடியத் தமிழர் பேரவை அழிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. உருவாக்குபவர்களுக்கு உறுதுணை புரிவதில் உறுதியாக நிற்கிறது. எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. நமது தாயகத்திற்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யத் தொடர்ந்து அயராது உழைப்போம்
amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி