18 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக அறிவிப்பு!

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல நீர்த்தேக்கம், தேவஹூவ, நாலந்த, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல, வெஹெரகல, குருநாகல் மாவட்டத்தின் தெதுறு ஓயா மற்றும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொடஆர ஆகிய பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 9,300 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சொரபொர நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீர் மஹாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.

கண்டி – நாலந்த நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,000 கன அடிக்கும் அதிகமான நீரும், தேவஹூவ நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,300 கன அடிக்கும் அதிகமான நீரும் தற்போது வெளியேற்றப்படுகின்றன.

மேலும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகிறது. வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தவிர, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 2,800 கன அடிக்கும் அதிகமான நீரும், அலிகொடாஹார நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீரும் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகின்றன.

அனுராதபுரத்தின் துருவில, பதுளையின் போம்புருஎல்ல, ஹம்பாந்தோட்டையின் தெபரவெவ, மொனராகலையின் சத்தாதிஸ்ஸ மற்றும் மாலின்பொத, வவுனியா மாவட்டத்தின் மயிலான்குளம் ஆகிய நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்கின்றன.

எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சியின் அடிப்படையில் இந்த நீர் வெளியேற்றப்படும் அளவு மாற்றமடையக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் அறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி