சிவகங்கை:
மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில், பாஸ்டேக் (FASTag) கணக்கில் போதிய பணம் இல்லாததால் நேற்று காலை அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 1 முதல் அனைத்து வாகனங்களும் மின்னணு அட்டை மூலமாக மட்டுமே சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், ஊழியர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மதுரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி நோக்கிச் சென்ற பேருந்துகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டதால், பணிக்குச் சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். விபத்தில் கண்ணாடி மாற்றப்படும் பேருந்துகளில் பழைய பாஸ்டேக் ஸ்டிக்கர்களையே ஒட்டுவதால் ஸ்கேனர் கருவிகள் அவற்றை அடையாளம் காண்பதில்லை என ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனால் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாவதாகவும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போக்குவரத்துப் பாதிப்பைக் கருதி சுங்கச்சாவடி நிர்வாகம் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பேருந்துகளைச் செல்ல அனுமதித்தது.
#FASTag #Thiruppachethi #TollPlaza #GovernmentBus #TrafficJam #SivagangaiNews #MaduraiToParamakudi #CommuterDistress #TransportDepartment #NHAI #TNSTC #BreakingNews #TamilNaduUpdate #May2 #PublicTransport #FASTagMandatory #May1Events #TollIssue #TamilNaduPolitics #TravelUpdate_