வடக்கில்பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கிடைத்துவந்த முறைப்பாடுகளையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட விசாரணைக் குழுவினர் வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 34 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் அதிரடி திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த விசேட குழு அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இம்முறைப்பாடுகளின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கும் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கும் கௌரவ ஆளுநர் குறித்த விசேட குழுவிற்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைவாக இக்குழுவினர் இன்று காலை வவுனியா மற்றும் கிளிநொச்சியில் தலா 06 பாடசாலைகள் மன்னார் மற்றும் முல்லைத்தீவில் தலா 07 பாடசாலைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் 08 பாடசாலைகள் என வடக்கு மாகாணம் முழுவதும் 34 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் களமிறங்கினர். இதன்போது உணவு வழங்கல் செயற்பாடுகள் உணவு தயாரிக்கப்படும் முறை அங்கு பேணப்படும் சுகாதாரத் தரநிலைகள் மற்றும் அது தொடர்பான உரிய ஆவணப் பேணுகைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக இந்தக் கள ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விசேட அவதானிப்பு அறிக்கையை இக்குழுவினர் கௌரவ ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

jail

இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

May 2, 2026

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Indi

தலைமன்னார் – தனுஷ்கோடி; ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!

May 2, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை

Bim

வடக்கில் உள்ள பிரச்சினைகளை வைத்தே இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை தக்கவைத்துக்கொள்கின்றார்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

May 2, 2026

“வடக்கிலும் தையிட்டி பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல்

bi

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

May 2, 2026

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில்

Ranga n

இன்று உயிரை மாய்த்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் இறுதிக்கிரியை

May 2, 2026

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில்

Arrest

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் உட்பட மூவர் கைது!

May 2, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

colombo market

கொழும்பின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4% ஆக உயர்வு

May 2, 2026

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) படி, மார்ச் மாதத்தில் 2.2% ஆகக் காணப்பட்ட ஒட்டுமொத்த வருடாந்த பணவீக்க விகிதம்,

tou

சுற்றுலாத்துறை: வளர்ச்சியை மீட்டெடுக்க ஆசிய சந்தைகளை இலக்கு வைக்கும் இலங்கை

May 2, 2026

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலகளாவிய ரீதியில் சவால்கள் நிலவிய போதிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை பின்னடைவுகளைத் தாண்டி முன்னேறி வருவதாக

horm

மத்திய கிழக்கு பதற்றம்: போர் அபாயக் காப்புறுதி கட்டணம் 50% உயர்வு – இலங்கை வர்த்தகம் பாதிப்பு

May 2, 2026

மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்புறுதி

ki

கிளிநொச்சி ஏ- 9 வீதியில் திடீர் வாகன சோதனை

May 2, 2026

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை

thar

தர்பூசணியால் மும்பை குடும்பம் மர்ம மரணம்?

May 2, 2026

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழம் சாப்பிட்டதே காரணம் என பரவி வந்த செய்திகள்

ir

ஈரானில் குண்டு வெடிப்பு: பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி!

May 2, 2026

ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரானின்