திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம் சிக்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (28) முதன்முறையாக நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது.

மின்னஞ்சல் கட்டமைப்பைப் பராமரிக்கும் நிறுவனம் இது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எவ்வித மேலதிக தேடுதல்களும் இன்றி இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக CID நீதிமன்றில் தெரிவித்தது. இதற்கமைய, அரச கடன் மேலாண்மை அலுவலகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்தது.

விசாரணை குறித்து கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் விடயங்களை முன்வைத்த CID அதிகாரி, இது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் நுணுக்கமான விசாரணை என்பதால், சமர்ப்பிக்கப்பட்ட 27 பக்க அறிக்கையை நீதிமன்றப் பதிவாளரின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்குமாறு கோரினார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் “exportfinance.gov.au” என்ற சரியான இணைய முகவரிக்கு பதிலாக, “exportfinance.av.com” என்ற போலி முகவரி மூலம் வந்த விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த மின்னஞ்சல் கட்டமைப்பைப் பராமரிக்கும் நிறுவனம் 2025.10.28 அன்றே இது குறித்து எச்சரித்திருந்த போதிலும், அந்த எச்சரிக்கைக்குப் பின்னரே நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் இன்டர்போல் மற்றும் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரின் (Australian Federal Police) உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதுவரை சந்தேக நபர்கள் எவரும் பெயரிடப்படவில்லை என்றாலும், மின்னஞ்சல் கொடுக்கல் வாங்கல்களில் நேரடியாகத் தொடர்புடைய 5 அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளைச் சோதனையிடவும் அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை ஒன்றியம், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினி கற்கைகள் பீடப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழிநுட்பக் குழுவொன்றை நியமிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஜூன் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

whea

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு

April 29, 2026

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை

sc

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு: இரண்டாம் நாள் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை!

April 29, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நேற்று

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்

Electricity Tariff-710053

மின்சாரக் கட்டணத் திருத்தம்: மே 9 ஆம் தேதி இறுதி முடிவு

April 29, 2026

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் தேதி