யாழ் அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையேவிசமிகள் மூட்டிய தீயால் தரிசுக் காணிகளில் இருந்த புற்றரைகள் பல ஏக்கர் அளவில் எரிந்து நாசமாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக புகை மூட்டம் அதிகரித்து, பொதுமக்கள் சாலையில் செல்வதற்கே சிரமமான நிலை உருவானது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியிலும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
வெப்பமான காலநிலையால் ஏற்கனவே வறண்டு வரும் பற்றரைகள் இவ்வாறு அழிவது கால்நடைகளின் உணவுக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.