சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் ஜயத்ர சம்பத் மிரண்டா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் பதக்கத்துடன் இலங்கை அணி இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
இதன் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் இலங்கை தற்போது 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ள வியட்நாம் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதேவேளை, போட்டியை நடத்தும் நாடான சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.