நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி அமைச்சும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் ஒரு விதமான விளக்கமும், பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றுமொரு விதமான விளக்கங்களையும் முன்வைத்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு இந்த இந்த நிதி மோசடி தொடர்பிலான உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய கடன் தரப்பாளியாக வேடமிட்ட போலி நபராலா அல்லது உத்தியோகபூர்வ அவுஸ்திரேலிய கடன் தரப்பாளிகளாலா அல்லது நமது நாட்டு இலங்கை பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் அல்லது வெளிநாட்டு வெளி வளங்கள் திணைக்களத்தாலா ? யாரின் தவறு காரணமாகவா இந்த சம்பவம் இடம்பெற்றது என்பதை அறிய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த விவரங்களை, இது சார்ந்த தகவல்களை நாட்டிற்கு முறையாக தெரிவிக்க தற்போதைய அரசாங்கத்தால் இதுவரையிலும் முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேன, நா உயனே அரியதம்ம தேரரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான புண்ணிய நிகழ்வு இன்று (24) விகாரை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்றதன் பிற்பாடு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி ஜனவரியிலேயே இந்த பிரச்சினை கண்டறியப்பட்டு பல மாதங்கள் இரகசியமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், ஜனவரியில் கண்டறிந்தும் மார்ச் வரை விசாரணைக் குழுவை ஏன் நியமிக்காமல் இருந்தீர்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது.

இந்த தகவல் வெளியாகும் வரை நிதி விடயங்களில் முக்கிய பொறுப்பை கொண்ட பாராளுமன்றத்திற்கு இந்த மோசடி குறித்து ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது மிகப் பாரதூரமான பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனில் ஜயந்த பிரதி அமைச்சர் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய அரசுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது நேர்ந்தது போலவே இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்களிலும் பணம் இழக்கப்பட்டிருந்தால் இதன் உண்மைத் தண்மையை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். பல மாதங்களாக இந்த விடயத்தை மறைத்து வைத்ததுக் கொண்டிருந்தது ஏன் என்பது பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இது மிகப் பாரதூரமான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நடந்த மோசடி சம்பவம் மிகவும் பாரதூரமானது. நமது நாடு பல இறையாண்மைப் பொறுப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ள ஒரு நாடாகும். இந்த பொறுப்புகளை நிறைவேற்றும்போது ஒரு நாடாக, ஒரு அரசாங்கமாக, நிதி அமைச்சாக வினைத்திறனற்ற முறையில் நடந்து கொண்டால், நாட்டைப் பற்றி சர்வதேசத்திற்கு மோசமான செய்தியே செல்லும்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகள், தொழில் முயற்சியாண்மைகள், பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் பேச்சுகளுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நாடாக சர்வதேசத்தில் எமக்கு இடமிருக்காது. இதனால் நாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை உலகிற்கு எம்மால் முன்வைக்க முடியாமல் போகின்றன. முதலீட்டு ஊக்குவிப்புக்கு இது தடையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிப்படையான விசாரணை சபையை நியமிப்பது இங்கு அரசாங்கத்தின் கடமையாக காணப்படுகின்றன. சர்ச்சைக்குரிய மோசடி நடந்த நிறுவனம், அதன் அதிகாரிகளை நியமித்து விசாரணை நியாயமாக நடத்த முடியாது. ஆகையினால் உண்மையான வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி இது தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். இந்த மோசடி திருட்டால் இந்த அரசாங்கம் இயலுமையற்ற அரசாங்கம் என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் சைபர் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாவிட்டால் நாட்டின் ஏனைய பாதுகாப்பு மற்றும் ஏனைய சைபர் பாதுகாப்புகள் தொடர்பில் நினைத்துப் பார்க்க முடியுமா? இந்நிலையில் ஜனாதிபதி உண்மையை பேச வேண்டும். இந்த சம்பவம் அரசாங்கத்தின் இயலாமையையும், வினைத்திறனில்லாத தன்மையையும், செயலற்ற தன்மையையும் நாட்டிற்கே காட்டிவிட்டது. ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்த ஸ்மார்ட் ஆட்சிக்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் இயலாமை மிக்க ஆட்சியையே நடத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

default (9)

கட்டினோ (Gatineau) வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

April 24, 2026

கியூபெக் மாகாணத்தின் கட்டினோ (Gatineau) நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒருவர்

canada police1

அலெக்ஸாண்ட்ரியாவில் வாகன விபத்து: 25 வயது இளம்பெண் படுகாயம்

April 24, 2026

ஒன்டாரியோவின் அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) பகுதியில் வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவரை வாகனம் மோதியதில் அவர் பலத்த காயங்களுக்கு

canada poli

பர்ஹேவன் (Barrhaven) கொலைச் சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் கைது

April 24, 2026

ஒட்டாவாவின் பர்ஹேவன் (Barrhaven) பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர்

HSWGNQTYHRDN7GXMW2PCPJ5LOE

”லவ் யூ மமா”: எட்மண்டன் தொண்டு நிறுவனத்தின் அன்னையர் தின நெகிழ்ச்சித் திட்டம்

April 24, 2026

எட்மண்டனைச் சேர்ந்த கலியோ கலெக்டிவ் (Kaleo Collective) என்ற தொண்டு நிறுவனம், எதிர்வரும் அன்னையர் தினத்தை முன்னிட்டு (மே 10)

034116b5-c0ca-4366-8630-a0e16d8eebe3

யாழ். உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளர்களுக்கு இளங்குமரன் எம்.பி வழங்கிய வாக்குறுதி

April 24, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு

678933459_122265107372059693_4641320959430003192_n

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல்

April 24, 2026

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர்

ZEWOPWWB4ZHL3CIYXLE5GCUMNA

அவர்களுக்கு நான் என் உயிரையே கடன்பட்டிருக்கிறேன்”: தீ விபத்தில் சிக்கியவரை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டு

April 24, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில், எரியும் வீட்டிற்குள் சிக்கியிருந்த ஒருவரைத் தமது உயிரையும் பொருட்படுத்தாது மீட்ட இரண்டு

TK74SVZPSRSOPP4YO4KV5LHNRU

தாயைக் கொன்ற மகனுக்கு ‘மனநோய்’ காரணமாகத் தண்டனையிலிருந்து விலக்கு: கனடா நீதிமன்றம் தீர்ப்பு

April 24, 2026

தனது 71 வயதுத் தாயை அடித்துக் கொலை செய்த பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அவர் செய்த

4RXAYPSYWFYQ4AR4PTSJQUVA6U

கனடாவின் சிறந்த மதுபாக விடுதியாக வான்கூவரின் ‘கீஃபர் பார்’ (Keefer Bar) தேர்வு

April 24, 2026

வட அமெரிக்காவின் 50 சிறந்த மதுபாக விடுதிகளின் (North America’s 50 Best Bars) 2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசை

T4KST5K4EJCHJHLTG3TYBIAADQ

சர்ரேயில் வசிக்கும் ஆபத்தான பாலியல் குற்றவாளி: பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 24, 2026

கனடாவின் சர்ரே (Surrey) நகரில் வசிக்கவுள்ள நதானியேல் ஓடோர்ஜன் (Nathaniel Odorjan) என்ற “அதிக ஆபத்துள்ள குற்றவாளி” (High-risk offender)

Screenshot_20260424_143852_YouTube

ரணில் இல்லத்திற்கு சி.ஐ.டி சென்றதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி

benjamin neta

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்றுநோய் பாதிப்பு: உத்தியோகபூர்வ அறிவிப்பு

April 24, 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தமக்கு ஆரம்பக் கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும்,