கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாகாண காணி ஆணையாளர் திணைக்கள மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல் இன்றைய தினம் (22.04.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோரின் பங்குபற்றுதலுடன்
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் பல வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள காணிப் பிணக்குகள் தொடர்பாக
பிரதேச செயலக ரீதியாக தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாகவும் காணி ஆவணப்படுத்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
மேலும் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி கச்சேரி மூலம் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டிய காணி தொடர்பான விபரம், அரச காணியில் வர்த்தக நோக்குடைய விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காணிகள், காணி அற்றோர் விபரம், மீள ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஆவண விபரங்கள், உள்ளூராட்சி அதிகாரசபைக்கு பாரப்படுத்தப்பட வேண்டிய அரச காணி தொடர்பான விபரங்கள், அரச திணைக்களங்களுக்கு கையளிக்கப்பட வேண்டிய அரச காணிகள், பகுதி நாள் கூட்டத்திற்கு முன்னிலைப்படுத்த வேண்டிய காணிப் பிணக்கு விபரங்கள், அளிப்புக்கள் தயாரிக்கப்பட்ட விபரங்கள், LDO அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பின்னரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காணிகள் உள்ளிட்ட விடயங்கள் பிரதேச செயலக ரீதியாக விரிவாக ஆராயப்பட்டன.