கனடா – மிசிசாகாவில் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம்; 12 மணி நேரத்தில் டிரெய்லர் மீட்பு!

கனடாவின்மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள கே.ரி குழும நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் (KT Group of Companies) ஏப்ரல் 16 வியாழக்கிழமை அதிகாலை திட்டமிட்ட கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வியாழன் ( ஏப்ரல் 16) நள்ளிரவு சுமார் 12:50 (கனேடிய நேரம்) மணியளவில், அடையாளம் தெரியாத குழுவினர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி டிரெய்லரை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த டிரெய்லர் இரும்பு பூட்டுடன் பாதுகாப்பாக பூட்டப்பட்டிருந்தபோதிலும், குற்றவாளிகள் இரும்பு வெட்டும் இயந்திரத்தை பயன்படுத்தி பூட்டை வெட்டி உடைத்து, டிரெய்லரை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் முழுமையான பாதுகாப்பு சீருடைகளை(சேப்டி யூனிபார்ம்களை) அணிந்து இருந்ததால், இது மிகவும் திட்டமிட்ட முறையில் நடைபெற்ற கொள்ளை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களில், குற்றவாளிகள் தொழில்முறை முறையில் செயல்பட்டது தெளிவாகக் காணப்படுகிறது. அது மாத்திரமன்றி இது முதல் சம்பவம் அல்ல. கடந்த ஆண்டும் இதே இடத்தில் இதே போன்ற கொள்ளை முயற்சி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது நிறுவன உரிமையாளர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சம்பவ இடத்திலேயே குற்றவாளிகளை தடுத்து நிறுத்தியிருந்தார். தற்போது இது இரண்டாவது முயற்சியாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன், வெறும் 12 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட டிரெய்லர் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தேடுதல் பணியில் இணைந்து செயல்பட்டனர். பின்னர்,  திருடப் பட்ட டிரெய்லர் வோன் நகரின் வுட்பிரிட்ஜ் (Woodbridge) பகுதி வாகனத் தரிப்பிடத்தில்  (Parking) மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை முன்னிட்டு, அனைவரும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த