ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 10 மணியளவில் ஏறாவூர் முதலாம் பிரிவு நூலக வீதியிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியிடம் இருந்து 5840 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றிய நிலையில் வீட்டை சோதனையிட்ட போது மேலும் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அத்துடன் அங்கு போதை வியாபாரியுடன் இருந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு கொஸ்தாப்பர் உட்பட இருவரையும் கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு போர்கள் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உர உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.

இலங்கை எப்போதெல்லாம் இன்னல்களைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் சீனா எப்போதும் முதன்முதலாக உதவிக்கரம் நீட்டி வருவதாகத் தூதுவர் வலியுறுத்தினார். தற்போதைய சர்வதேச நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விவசாயத் துறை சார்ந்த சவால்களை முறியடிக்க சீனா இலங்கைக்குத் துணையாக இருப்பதாக அவர் கூறினார்.

எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை எரிபொருள் உதவியை வழங்கிய ஒரே நாடு சீனா மட்டுமே என்று தூதுவர் சி குறிப்பிட்டார். “சீனா மட்டுமே, சீனா மட்டுமே இதுவரை எரிபொருள் உதவியை வழங்கியுள்ளது,” என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.

சீனா தனது எண்ணெய்த் தேவையில் 76 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்வதன் மூலம் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட போதிலும், இலங்கையின் சுமையைப் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார். தனது சொந்தத் தேவைகளுக்காக இறக்குமதியைச் சார்ந்திருந்தாலும், இலங்கையின் சிரமங்களைப் போக்க சீனா தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றார்.

சினோபெக் (Sinopec) நிறுவனம் மூலமான எரிபொருள் விநியோகம் குறித்து விளக்கிய அவர், கடந்த மாதம் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைந்ததாகவும், போக்குவரத்துச் சவால்களை முறியடித்து இந்த மாதமும் மற்றுமொரு விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவை தவிர, சீன அரசாங்கம் நேரடியாகவும் இலங்கைக்கான எரிபொருள் உதவியைத் தொடரும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

எரிபொருள் மட்டுமன்றி, இலங்கையின் விவசாயத் துறைக்கும், குறிப்பாக சிறுபோக (Yala season) நெல் உற்பத்திக்கு அவசியமான உர விநியோகத்திற்கும் சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

யூரியா உரத்தைத் தயாரிக்கத் தேவையான இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உலகளவில் உரத் தட்டுப்பாடு நிலவுவதைச் சுட்டிக்காட்டிய தூதுவர், “திரவ இயற்கை எரிவாயு (LNG) இல்லாமல் யூரியாவைத் தயாரிக்க முடியாது,” என்றார். இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், சிறுபோகத்தில் விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கையைத் தடையின்றி மேற்கொள்ளத் தேவையான உரத்தை சீனா இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

photo-collage.png (10)

கனடா வாகன விபத்தில் கொல்லப்பட்ட தனது குடும்பத்துக்காக நியாயம் கேட்டுப் போராடிய தமிழருக்கு நீதி மறுப்பு!

April 17, 2026

கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய