பச்சிலைப்பள்ளி – முகாவிலில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராகப் போராட்டம்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில், தமிழ் மக்களின் சொந்த காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக இன்று ஜனநாயக ரீதியான போராட்டம் நடைபெறுகிறது.

இராணுவத்தினர் வசம் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைப்போம் என தெரிவித்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று தமிழ்; மக்களின் உறுதி காணிகளை இராணுவத்தினருக்கு நிரந்தர முகாமை அமைப்பதற்காக கையகப்படுத்த முயல்கின்றது என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவேளை இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலளார் பிரிவிற்கு உட்பட்ட முகாவில் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளுக்கு தமிழ் மக்களின் உறுதி காணிகளை அவர்களின் விருப்பங்களுக்கு மாறாக சுவீகரித்து அந்த படையினருக்காக வழங்குவதற்கு என இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தன.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் மததலைவர்களும் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் வெளியிட்ட எதிர்ப்பின் காரணமாக இந்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் அறிவுறுத்தல் நில அளவை திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இங்கே நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையிலே இந்த நில அளவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலே இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகின்றது.

இந்த அளவீட்டு செயற்பாடுகளை முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுரகுமார திசநாயக்க பதவிக்கு வருகின்ற போது தாங்கள் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிப்போம் மக்களின் காணிகளில் இராணுவத்தினருக்கு வேலை இல்லை என தெரிவித்து எங்களை முழுமையாக நம்பவைத்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றுதான் அவர்கள் பதவி வந்தார்கள்.

அவர்கள் பதவிக்கு வந்த பின்னர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறீதரனும் மிக தெளிவாக இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும், இராணுவமுகாம் அகற்றப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்த போது அது தீர்மானமாக உள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியினர் இ;வ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது அவர்களின் முகங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று இந்த போராட்டம் இடம்பெறவில்லை என்றால் இங்கு நிலஅளவீடு இடம்பெற்று பல ஏக்கர் காணிகள் எங்களை அழித்த இராணுவத்தினர் நிரந்தரமாக தங்குவதற்கான ஒரு முகாமாக மாற்றப்பட்டிருக்கும்.

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா

tour

இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாரிய வீழ்ச்சி

April 18, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வெளிநாட்டு செலாவணி வருவாய், 2026 மார்ச் மாதத்தில் 223.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.

Parliament

இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

April 18, 2026

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள்

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான