சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு சுமந்திரன் கடும் ஆட்சேபனை

குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தார்.

இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்குத் தொடுநர் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் பண்டார ஆஜராவதற்கு சுமந்திரன் அடிப்படை ஆட்சேபனை தெரிவித்தார்.

சந்தேக நபரான நீதிபதி சுமார் 20 வருடங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியவர் என்பதால், அதே திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த வழக்கில் தலையிடுவது ஒரு தெளிவான ‘அக்கறை முரண்’ (Conflict of Interest) என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நீதியரசர்களின் விலகல்

இச்சம்பவம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து, பல நீதியரசர்கள் சந்தேக நபருடன் பணிபுரிந்த காரணத்தால் விலகியுள்ளதையும், தற்போது நான்காவது தடவையாக புதிய நீதியரசர் குழாம் அமைக்கப்படவுள்ளதையும் சுமந்திரன் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

முன்னைய வழக்குகள் மற்றும் விரைவான சட்ட ஆலோசனைகள் குறித்த சந்தேகம்

சந்தேக நபரின் பெற்றோருக்கு எதிரான மட்டக்களப்பு நீதிமன்ற வழக்கில் (B/406/2011), சட்டமா அதிபர் காரியாலயம் தலையிட்டு அவர்களை விடுவித்தமையை குறிப்பிட்ட சுமந்திரன், நூற்றுக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் இந்த நீதிபதிக்காக மட்டும் மிக விரைவாக விடுவிப்பு ஆலோசனை வழங்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

சந்தேக நபரின் வாக்குமூலம் மற்றும் பொலிஸாரின் அணுகுமுறை,

நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், சந்தேக நபரிடம் நேரடியாக வாக்குமூலம் பெறாமல் அவரது மெய்ப்பாதுகாவலர் மூலம் தகவல் பெறப்பட்டதை அவர் விமர்சித்தார். இன்றுவரை சந்தேக நபரின் வாக்குமூலச் சுருக்கத்தை மன்றுக்கு சமர்ப்பிக்காமல் நேரடியாக சட்டமா அதிபருக்கு அனுப்பியமை பாரதூரமான விடயம் என வாதிடப்பட்டது.

நீதவான் நீதிமன்றின் அதிகாரம் குறித்த சட்ட வாதம்

சட்டமா அதிபரின் ஆலோசனை போலீசாரை கட்டுப்படுத்தினாலும், அது நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்ட சுமந்திரன், குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 120(3) இன் கீழ் நீதவானுக்கே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக வலியுறுத்தினார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் மற்றும் எச்சரிக்கை

விடுவிப்பு ஆலோசனையை நீதவான் பின்பற்றத் தவறினால் அது “ஆற்று வெள்ளத்தைத் திறந்துவிட்டது போல” (Opening floodgates) பல விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்றும், ஆட்சேபனைகள் இருப்பின் அதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

வழக்கின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகளின் விபரம்

2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் மஹாதேவன் முரளிதரனால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 486 மற்றும் 344 இன் கீழ் இந்த வழக்கு பெரியநீலாவணை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று (30) இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மகாதேவன் முரளிதரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், என். சிவரஞ்சித், ஏ.எல். ஆசாத், சுஹால் பிஸ், டி. மதிவதனன், பி. துஷான், அ.நிதான்சன், ரிப்கான் கரீம் ஆகியோருடன் மேலும் பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. கஜேந்திரன் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் ஏனைய உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான் கே.எல்.எம். சாஜித் வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். அத்துடன் சந்தேக நபரின் வாக்குமூலம் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், மேலதிக நடவடிக்கைகள் குறித்து மே 04 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்

ele co

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தாமதம்: தேர்தல் ஆணைக்குழு அதிருப்தி

April 21, 2026

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல்

arrest-1

10 லட்சம் ரூபாய் வங்கி மோசடி: போலி இணையதளத்தை உருவாக்கிய இளைஞர் கைது

April 21, 2026

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்

easter bomb 2026

இலங்கையில்உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் : ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

April 21, 2026

(AFP) நீர்கொழும்பு, இலங்கை – இலங்கையில் 279 பேரைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

namal raja

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியலாக்குவதாக நாமல் குற்றச்சாட்டு

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியலாக்கி வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து