உணவு பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி உள்ளிட்ட குழுவினரும், வர்த்தக அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, கலாநிதி சாந்த ஜயரத்ன மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பொதுச்சபையின் (CWE) தலைவர் கோசல வில்பாவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பரிமாற்றங்களை மேலும் விரிவுபடுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துதல், புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல், இரு நாடுகளினதும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காகப் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை உற்பத்திகளை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்காகக் கண்காட்சிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறை குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், இலங்கையின் உயர்தர ஆடைகளுக்கு இந்தியாவில் பெரும் தேவை நிலவுவதால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, இலங்கையின் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் NCL நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இது ஒரு நேரடி விநியோகப் பிணைப்பை விடவும் விரிவான ஒத்துழைப்பாக அமையும் என இந்தியப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் அரிசிச் சந்தை நிலவரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அரிசி விலை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், சம்பா போன்ற விசேட அரிசி வகைகளுக்குச் சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300,000 மெட்ரிக் தொன் அரிசியை முகாமைத்துவம் செய்ய முடிந்தால், நிச்சயமாக விலையைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்திய விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச உறுதிமொழி விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அங்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வரம்பற்ற முறையில் இருப்புக்களைச் சேமிப்பதைத் தடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் ‘இந்திய உணவுக் கழகம்’ வசம் உள்ள பாரிய களஞ்சியத் தொகுதிகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் இதன்போது அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு விளக்கமளித்தார்.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை