மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு!

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

நேற்று (09) இந்த வழக்கின் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன, அர்ஜுன ஒபயசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய விசாரணை தொடங்கியதும், குற்றச்சாட்டில் உள்ள நலின் பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி மேலதிக வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மஹிந்த ராஜபக்சாவின் தேர்தல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக லங்கா சதோசா நிறுவனத்தின் மூலம் 14,000 கரம் பலகைகள் மற்றும் 11,000 டாம்பிள் பலகைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 60 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கு யஹபாலன ஆட்சி காலத்தில் கொழும்பு நிரந்தர உயர்நீதிமன்ற விசாரணை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. பின்னர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், மஹிந்தானந்த அலுத்கமகேக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், நலின் பெர்னாண்டோவுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுவிக்குமாறு கோரி, இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.