தரம் குறைவான நிலக்கரி; 2200 மில்லியன் நஷ்டத்துக்கு 392 மில்லியன் மாத்திரமே தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது!

இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சுமத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 5900 – 6150 கிலோ கலரிக்கு இடையில் காணப்பட்டதால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த சுமை மக்கள் மீது சுமத்தப்படாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கப்பலால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 288.5 மில்லியனாகும். ஆனால் தண்டப்பணமாக 135.1 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. அதேபோன்று மூன்றாவது கப்பலால் 1047.4 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், 150.3 மில்லியன் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

நான்காவது கப்பலால் 865 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், 107.1 மில்லியன் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. முதல் நான்கு கப்பல்களால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது.

தண்டப்பணத்துக்கும் நஷ்டத்துக்குமான வேறுபாட்டை மக்கள் மீது சுமத்துவதற்கே தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி நிலக்கரியின் தரம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வக அறிக்கை தொடர்பிலும் எமக்கு சந்தேகம் எழுகிறது. அவை போலியான அறிக்கைகளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றோம். எமது சந்தேகங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்