இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை அவசர மருத்துவ சிகிச்சையை மதிப்பீடு செய்து, அந்தத் தகவலை ஜப்பானிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்குவதற்காக, ஜப்பானிய சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
5 மருத்துவர்கள் உட்பட , ஜப்பானிய அரசாங்க தொடர்பு அதிகாரிகள் கொண்ட குழுவே இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளது.