மரதன்கடவெல ஏ-09 வீதியில், தவலஹல்மில்லேவ பகுதியில் வேன் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) மாலை பதிவாகியுள்ளது.
மரதன்கடவெலயிலிருந்து கெக்கிராவ நோக்கி சென்ற வேன் ஒன்று மோதியதிலே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது விபத்தில் காயடைந்த பாதசாரி மரதன்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மரதன்கடவெல – தவலஹல்மீல்லேவ பகுதியைச் சேர்ந்த 95 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தெபடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மரதன்கடவெல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.