தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றவே அரசாங்கம் செயற்படுகிறது – விமல் வீரவன்ச

தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா அண்மையில் ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகப் பெயரிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பதினொரு தமிழர்களின் பெயர்களை அந்த வர்த்தமானி அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், அவர்கள் தடைசெய்யப்பட்ட நபர்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தனர். வர்த்தமானி அறிவிப்பிலிருந்து அந்த 11 பெயர்களையும் நீக்கி, அவர்களை அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தவர், ஜனாதிபதி அநுர குமாரவின் கீழ் உள்ள பாதுகாப்புச் செயலாளராவார் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

குறித்த நபர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவுகளுக்கமையவே பட்டியலிடப்பட்டிருந்தனர். அதாவது, இவர்கள் பயங்கரவாதத்திற்குப் பணம் அனுப்பினர், பணச் சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு குழுவைத்தான் பாதுகாப்பு செயலாளர் அவற்றிலிருந்து விடுவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமாரவின் அனுமதியின்றி பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா இதைச் செய்திருக்க மாட்டார்.

குறித்த 11 பேருக்கு, பயங்கரவாதத்திற்குப் பணம் சேகரித்தல், பணச் சலவை போன்ற சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தும், தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்படுகின்றன. அதாவது, அவர்கள் இப்போது இலங்கைக்குள் சுதந்திரமாக வந்து போகலாம். அவர்கள் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடலாம். தேவைப்பட்டால் பயங்கரவாதத்திற்கு மீண்டும் பணம் அனுப்பலாம்.

அந்தச் சுதந்திரத்தை அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டு, இங்கே பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவை தொடர்பில் கேள்வியெழுப்பினால் இராணுவ வீரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் எனக் கூற வேண்டாமென ஜனாதிபதி எம்மை எச்சரிக்கின்றார்.

தேர்தலுக்குச் செலவு செய்த தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார். செல்லுபடியான குற்றச்சாட்டுகளைக் கொண்ட புலிகளைத் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், இங்கு வந்து, கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இந்த தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இப்போது அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை ஒரு பங்காளியாக ஆக்குகிறார்கள். மறுபுறம், புலிகளின் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களை நீக்குகிறார்கள். இன்னொரு புறம், பாதுகாப்புப் படையினர், கடற்படையினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறி அவர்களை பழிவாங்குகின்றனர் என்றார்.

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்

1200-675-26085949-thumbnail-16x9-2

“விஜய் சிஎம் ஆவதைத் தடுக்க திமுக-அதிமுக கூட்டணி வைக்கப் பார்த்தன!” – தேர்தல் ரகசியத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்!

May 24, 2026

விருதுநகர்: “வாக்கு எண்ணிக்கை நாளன்று டெல்லி பாஜக-வின் உத்தரவின்படி, நடிகர் விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் இணைந்து

dt-next_import_imported_import_Articles_2019_Mar_201903190359578020_Thirunavukkarasar-hunts-for-Tiruchy-address_SECVPF

“திமுக-வினர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது!” – கூட்டணி மோதல் குறித்து திருநாவுக்கரசர் நாகரிக தாக்கு!

May 24, 2026

சென்னை: “கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படுவதும், கட்சிகள் பிரிவதும் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிய அதிசயம் அல்ல; இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பிரிந்து