மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால் எமக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் – ராேஹித்த அபேகுணவர்த்தன

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆளும் தரப்பினர் மொத்தமாக 83 தடவைகள் கைதட்டி வரவேற்றனர். இவ்வாறுதான் நாங்களும் அன்று கைதட்டி வரவேற்றோம். ஆனால் இரவில் நித்தரைகொண்டு எழும்பும்போது எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

எமது அரசாங்கம் இல்லாமல்போயுள்ளது. இவ்வாறு நாங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்கள் இடம்பெறுகிறது என்பதை நாங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

அத்துடன் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் தீவிர ஆயுதம்தான் பொய். ஆனால் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அந்த பொய்யை பயன்படுத்த முடியாது. அந்த ஆயுதத்தை மக்கள் நம்பப்போவதில்லை. இந்த வரவு செலவு திட்ட விவாத்தத்தின்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரதான

குற்றச்சாட்டு, இந்த அரசாங்கம் 2025 வரவு செலவு திட்டத்தில் பிரேரித்த முன்மொழிவுகளில் 50 வீதத்தைக்கூட பூரணப்படுத்தவில்லை என்பதாகும். இதற்கு காரணம் என்ன என்பதை தேடிப்பாருங்கள். அதேபோன்று அடுத்த வருடத்துக்கு சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு பிரேரணைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. அடுத்த வருடம் டிசம்பர் மாதமாகும்போது இந்த பிரேரணைகளில் 50வீதமாவது பெய்து முடிக்கும் என நம்பிக்கை இல்லை.

ஏனெனில் இந்த நாட்டில் 17 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் தற்போது பயமுறுத்தி இருக்கிறது. அவர்கள் விரைவாக தீர்மானங்களை எடுப்பதில்லை. பிரதேச செயலாளர் முதல் ஜனாதிபதி செயலாளர் வரை, நல்ல வேலைத்திட்டத்துக்காக தவறான முறையில் கைச்சாத்திட்டு பிற்காலத்தில் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும்போது அவர்களை பாதுகாக்க யாரும் முன்வருவதில்லை. அதனால்தான் இந்த அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு வேலை செய்ய முடியாமல் போனதற்கு காரணமாகும். முற்படுவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில், அரசாங்கத்தின் பிரபல்லியம் குறைவடைந்து வருகிறது. அரசாங்கத்துக்கு எதிராக முதலாவதாக வீதிக்கி இறங்கி இருப்பது விவசாயிகளாகும். இவர்கள்தான் இந்த அரசாங்கத்துக்கு முழுமையாக வாக்களித்தவர்கள். அப்படியென்றால் ஏன் இவர்கள் எதிராக இறங்கி இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சினை தொடர்பில் தேடிப்பா்க்க வேண்டும். ஒருவருடத்துக்கு முன்னர் அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் விருப்பம் தற்போது இருக்கிறதா அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வாழ்வதற்கு முடியாதவு செலவு அதிகரித்த நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அரசாங்கம் நல்ல முறையில் செயற்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்படப்போவதில்லை.எமது ஆட்சியில் எங்களுக்கு முலாவது எதிர்ப்பு வந்தது.

கூட்டுறவு சங்க தேர்தலிலாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

3

யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் – ஆளுநருக்கு தவெக கடும் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு ஆளும் தவெக

dead'

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

July 29, 2026

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய

Arrest

இலங்கைக் குற்றவாளிகள் மூவர் மலேசியாவில் கைது

July 29, 2026

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான “ரத்மலானை சைமா” உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் திட்டமிட்ட குற்றச்

759849590_1568950914630156_596272536240665203_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

July 29, 2026

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான

2

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி!

July 29, 2026

கரூர்: திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய அரசியல் பிரமுகருமான செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று

1

தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே 3-ம் இடத்திற்குத் தள்ளுவதா? – சீமான் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின்

758037446_1045398538354019_6141625928540443025_n

தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி

July 29, 2026

இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக்

anura may 26

எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் – தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்

July 29, 2026

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின்

759390981_1072436365239046_9209066260461902919_n

பருத்தித்துறை நகரசபை, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

July 29, 2026

ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, சபையின் நிர்வாக எல்லைக்குள்

peel poli

பிராம்ப்டன் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஆயுதம் ஏந்திய ஆபத்தானவராகக் கருதப்படும் 19 வயது இளைஞருக்குக் கனடா தழுவிய பிடியாணை

July 29, 2026

ஒன்டாரியோவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் ஏப்ரல் மாதம் இருவர் படுகாயமடையக் காரணமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, 19 வயது

AB2WZMOCSRBWDHP4MDQ3RDV3VI

ரொறன்ரோவில் பாலியல் சேவைக்குக் பணம் செலுத்தியவருக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளை: பெண் தேடப்பட்டு வருகிறார்

July 29, 2026

டவுன்டவுன் ரொறன்ரோவில் வார இறுதியில் பாலியல் சேவைகளுக்காகப் பணம் செலுத்திய நபர் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையடித்த சம்பவத்தைத்

EQLT6ZRQENFFFNBTQBLPW2R6JQ

15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலால் ஹால்டன் பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கை வெற்றி

July 29, 2026

ரொறன்ரோ பகுதியில் (GTA) இயங்கி வந்த குற்றவியல் வலையமைப்பினால் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின்