மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால் எமக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் – ராேஹித்த அபேகுணவர்த்தன

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆளும் தரப்பினர் மொத்தமாக 83 தடவைகள் கைதட்டி வரவேற்றனர். இவ்வாறுதான் நாங்களும் அன்று கைதட்டி வரவேற்றோம். ஆனால் இரவில் நித்தரைகொண்டு எழும்பும்போது எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

எமது அரசாங்கம் இல்லாமல்போயுள்ளது. இவ்வாறு நாங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்கள் இடம்பெறுகிறது என்பதை நாங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

அத்துடன் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் தீவிர ஆயுதம்தான் பொய். ஆனால் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அந்த பொய்யை பயன்படுத்த முடியாது. அந்த ஆயுதத்தை மக்கள் நம்பப்போவதில்லை. இந்த வரவு செலவு திட்ட விவாத்தத்தின்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரதான

குற்றச்சாட்டு, இந்த அரசாங்கம் 2025 வரவு செலவு திட்டத்தில் பிரேரித்த முன்மொழிவுகளில் 50 வீதத்தைக்கூட பூரணப்படுத்தவில்லை என்பதாகும். இதற்கு காரணம் என்ன என்பதை தேடிப்பாருங்கள். அதேபோன்று அடுத்த வருடத்துக்கு சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு பிரேரணைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. அடுத்த வருடம் டிசம்பர் மாதமாகும்போது இந்த பிரேரணைகளில் 50வீதமாவது பெய்து முடிக்கும் என நம்பிக்கை இல்லை.

ஏனெனில் இந்த நாட்டில் 17 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் தற்போது பயமுறுத்தி இருக்கிறது. அவர்கள் விரைவாக தீர்மானங்களை எடுப்பதில்லை. பிரதேச செயலாளர் முதல் ஜனாதிபதி செயலாளர் வரை, நல்ல வேலைத்திட்டத்துக்காக தவறான முறையில் கைச்சாத்திட்டு பிற்காலத்தில் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும்போது அவர்களை பாதுகாக்க யாரும் முன்வருவதில்லை. அதனால்தான் இந்த அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு வேலை செய்ய முடியாமல் போனதற்கு காரணமாகும். முற்படுவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில், அரசாங்கத்தின் பிரபல்லியம் குறைவடைந்து வருகிறது. அரசாங்கத்துக்கு எதிராக முதலாவதாக வீதிக்கி இறங்கி இருப்பது விவசாயிகளாகும். இவர்கள்தான் இந்த அரசாங்கத்துக்கு முழுமையாக வாக்களித்தவர்கள். அப்படியென்றால் ஏன் இவர்கள் எதிராக இறங்கி இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சினை தொடர்பில் தேடிப்பா்க்க வேண்டும். ஒருவருடத்துக்கு முன்னர் அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் விருப்பம் தற்போது இருக்கிறதா அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வாழ்வதற்கு முடியாதவு செலவு அதிகரித்த நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அரசாங்கம் நல்ல முறையில் செயற்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்படப்போவதில்லை.எமது ஆட்சியில் எங்களுக்கு முலாவது எதிர்ப்பு வந்தது.

கூட்டுறவு சங்க தேர்தலிலாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

crim

கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

May 31, 2026

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக்

rain

இன்று பல பிரதேசங்களில் மழை

May 31, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை

dd

நடிகர் அஜித்தின் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

May 31, 2026

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி

Agalagada

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூட பிக்குகள் – பௌத்த மக்கள் பிணைப்பை உடைக்க முடியவில்லை – அகலகட சிறிசுமன தேரர்

May 31, 2026

இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலான பிணைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்

fue

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

May 31, 2026

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

May 31, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

mass

பரவி வரும் மூளைக்காய்ச்சலைத் தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டும் அறிவுறுத்தல்கள்

May 31, 2026

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் என்டிரோவைரஸ் மூளைக்காய்ச்சல் எனப்படும் நோயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, சுகாதார மற்றும்

har

பிரதமர் ஹரிணி பிரித்தானியாவில் தங்கியிருந்த இல்லம் குறித்தும் சர்ச்சை

May 31, 2026

இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின்

chann

தமிழ் இனப்படுகொலை நாட்டில் இடம்பெறவில்லை; ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்ற ‘பிரிகேடியர் பால்ராஜ்’ ஐ பாராளுமன்றில் நினைவுகூர விட்டிருக்கக் கூடாது!

May 31, 2026

டாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என

NT5WBSMVIZCQFAUVDLDAPULJTM

நோர்த் யார்க்கில் ‘வீட்டின் அருகிலேயே’ நபர் ஒருவர் சுட்டுக் கொலை (Formal Tamil)

May 30, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள தனது வீட்டின் அருகிலேயே 27 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

arrestt

பிராம்ப்டன் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

May 30, 2026

பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனில் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஒரு நபரை 21-வது

acc 12

மிசிசாகா 410 நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து

May 30, 2026

மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலை, டெரி சாலைக்கு (Derry Road) அருகே, நெடுஞ்சாலை 410-இன் தெற்கு திசை பாதையில் (Highway 410