இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில்14 அரசியல் கட்சிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண விஜயம் அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொண்டு இளம் அரசியல் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்படஉள்ளது.