நாட்டில் நிலவும் கனமழை, பலத்த காற்றுடனான சீரற்ற வானிலை காரணமாக 4 பேர் உயிரிழந்ததாகவும் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கணக்கெடுப்பின்படி, பலத்த மழை, காற்று முதலான இயற்கை அனர்த்தங்களினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 480 வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இயற்கைப் பேரிடர்கள் நிலவிவரும் இந்நாட்களில் அவசர தேவைக்காக தொடர்புகொள்வதற்கு 117 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.