88 எஃப்-35 (F-35) போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை கனடா தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து வருவதாகவும், இதற்கு மாற்றாக மற்றுமொரு விமானத்தைக் கொள்வனவு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக டேவிட் மெக்கின்டி (David McGuinty) தெரிவித்துள்ளார்.
லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்துடனான பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 2023 இல் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்க பாதுகாப்பு விநியோகஸ்தர்களை அதிகம் சார்ந்திருப்பது குறித்த கவலைகள் எழுந்ததையடுத்து, 2025 ஆம் ஆண்டில் மார்க் கார்னி (Mark Carney) இதற்கான மீளாய்வு உத்தரவைப் பிறப்பித்தார்.
செனட் குழுவிடம் பேசிய மெக்கின்டி, கனடாவின் போர் விமானப் படையின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும், இதில் பிற நாடுகளிடமிருந்து விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் அடங்கும் என்றும் கூறினார். குறிப்பாக, சுவீடனின் சாப் (Saab) நிறுவனத்தின் விமானங்களை வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கனடா ஏற்கனவே முதல் 16 எஃப்-35 விமானங்களுக்கான நிதியை ஒதுக்கியுள்ளது, ஆனால் முழுப் படைப் பிரிவு குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் நிலவி வரும் சூழலிலும், பாதுகாப்புப் பங்களிப்புகளைப் பன்முகப்படுத்தும் ஒட்டாவாவின் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த மீள்பரிசீலனை பார்க்கப்படுகிறது