32ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை முறியடிப்பு

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்.

’14 பீக்ஸ் எக்ஸ்பெடிஷன்’ நிறுவனத்தின் ஊடாக வருகை தந்த மலையேற்றக் குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற 56 வயதான காமி ரீட்டா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) முற்பகல் 10:12 மணியளவில் 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

காமி ரீட்டாவின் இந்த ‘வரலாற்று மைல்கல்’ சாதனையைப் பாராட்டியுள்ள நேபாள சுற்றுலாத்துறை திணைக்களம், சர்வதேச மட்டத்தில் நேபாளத்தின் மலை உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பிட்டுள்ளது.

காமி ரீட்டா செர்ப்பா முதன்முதலில் 1994ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார்.

2014, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதைத் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் அவர் சிகரத்தை ஏறியுள்ளார். சில ஆண்டுகளில் இரண்டு முறை கூட சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் 1953 இல் வென்ற டென்சிங் நோர்கேயின் அதே ‘தாமே’ கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 52 வயதான நேபாள செர்ப்பா பெண்மணியான லக்பா (Lhakpa Sherpa) நேற்று தனது 11ஆவது எவரெஸ்ட் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறிய பெண் என்ற தனது சொந்த உலக சாதனையை அவரும் நீடித்துள்ளார்.

செர்ப்பா அல்லாத வெளிநாட்டு மலையேறுபவர்களில், பிரித்தானிய வழிகாட்டியான கென்டன் கூல் 19 முறைகளும், அமெரிக்க வீரர்களான டேவ் ஹான் மற்றும் காரெட் மேடிசன்ஆகியோர் தலா 15 முறைகளும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளனர்.

தற்போதைய மார்ச்-மே மாத மலையேற்றக் காலப்பகுதிக்காக நேபாள அரசு 492 அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ள நிலையில், நடப்பு மாதத்தில் மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளமை மலையேற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்