2500 மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 வரையான மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த இக்கட்டான நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாத அராசங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியை முன்னெடுத்து வருவதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயிற்சியை முடித்த மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவது தொடர்பாகச் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒட்டுமொத்தத் தொழில்முறை வல்லுநர்களாலும் அருவருக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தாமல், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அமைச்சர் முயற்சிக்கிறார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முதலில் தனது சொந்த மாவட்டமான களுத்துறையில் உள்ள சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். களுத்துறை மாவட்டத்தின் முக்கிய மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. அவற்றில் சில வைத்தியசாலைகள் மூடப்பட்டும் கிடக்கின்றன. தனது சொந்த மாவட்டத்தின் அடிப்படைச் சுகாதார வசதிகளைக்கூட மேம்படுத்த முடியாத ஒருவர், அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கப் பார்ப்பது அவரது நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, மக்களுக்கான தேசிய சுகாதாரக் கொள்கை, மனிதவள முகாமைத்துவத்துக்கான ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றக் கொள்கைகள், மருந்து மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான கொள்கை போன்ற எதையுமே உருவாக்கச் சுகாதார அமைச்சு தவறிவிட்டது.

தங்களுக்கு மிக அருகில் இருக்கும் தேசிய வைத்தியசாலைக்கு ஒரு நிரந்தர பிரதிப் பணிப்பாளரைக்கூட நியமிக்க முடியாத அளவுக்குச் சுகாதார அமைச்சு நிர்வாகக் குளறுபடிகளால் நிறைந்துள்ளது. அமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகள் இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியின் ஆரம்பப் புள்ளியாகும்.

கிராமப்புற வைத்தியசாலைகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகள் குறைக்கப்பட்டு, அவை படிப்படியாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கமானது சுகாதார சேவைகளை ஒடுக்கி, மக்கள் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தனியார் சுகாதாரச் சேவையை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

இந்த ஒட்டுமொத்த மோதலாலும் மிகவும் பாதிக்கப்படுவது நாட்டின் அப்பாவி ஏழை மக்கள் மட்டுமே. ஏழை மக்கள் கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்லும்போது அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை, ஆய்வகப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடிவதில்லை. மக்களைப் பகடைக்காய்களாக்கி அரசியல் ஆதாயம் தேடும் இந்தச் செயல்பாட்டை அமைச்சர் உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும். சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் போன்ற அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கித் தங்களது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். முன்னைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே இவர்கள் இப்போதும் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

இத்தகைய ஊழல் அதிகாரிகளை வைத்துக்கொண்டு அமைச்சர் நடத்தும் இந்த விளையாட்டை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும். அமைச்சரின் அடக்குமுறை முடிவுகளால் மருத்துவர்கள் பணிந்துவிட மாட்டார்கள். ஒட்டுமொத்த சுகாதார அமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் செயல்பட்டால், நாட்டின் அனைத்து மருத்துவர்கள், சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய பொதுத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து அமைச்சரின் செயல்பாடுகளுக்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கும்.

சில மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது, அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பேசும் ஒரு சிறிய குழுவினர் மட்டுமே. எனவே, இந்த பூனைக்கும் எலிக்கும் இடையிலான விளையாட்டை நிறுத்திவிட்டு, மருத்துவர்களின் தொழில்சார் பிரச்சினைகளைத் தீர்க்கப் பேச்சுவார்த்தைக்கு உடனடியாக இடமளிக்க வேண்டும் என்றார்.

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை