2500 மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 வரையான மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த இக்கட்டான நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாத அராசங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியை முன்னெடுத்து வருவதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயிற்சியை முடித்த மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவது தொடர்பாகச் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒட்டுமொத்தத் தொழில்முறை வல்லுநர்களாலும் அருவருக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தாமல், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அமைச்சர் முயற்சிக்கிறார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முதலில் தனது சொந்த மாவட்டமான களுத்துறையில் உள்ள சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். களுத்துறை மாவட்டத்தின் முக்கிய மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. அவற்றில் சில வைத்தியசாலைகள் மூடப்பட்டும் கிடக்கின்றன. தனது சொந்த மாவட்டத்தின் அடிப்படைச் சுகாதார வசதிகளைக்கூட மேம்படுத்த முடியாத ஒருவர், அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கப் பார்ப்பது அவரது நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, மக்களுக்கான தேசிய சுகாதாரக் கொள்கை, மனிதவள முகாமைத்துவத்துக்கான ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றக் கொள்கைகள், மருந்து மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான கொள்கை போன்ற எதையுமே உருவாக்கச் சுகாதார அமைச்சு தவறிவிட்டது.

தங்களுக்கு மிக அருகில் இருக்கும் தேசிய வைத்தியசாலைக்கு ஒரு நிரந்தர பிரதிப் பணிப்பாளரைக்கூட நியமிக்க முடியாத அளவுக்குச் சுகாதார அமைச்சு நிர்வாகக் குளறுபடிகளால் நிறைந்துள்ளது. அமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகள் இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியின் ஆரம்பப் புள்ளியாகும்.

கிராமப்புற வைத்தியசாலைகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகள் குறைக்கப்பட்டு, அவை படிப்படியாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கமானது சுகாதார சேவைகளை ஒடுக்கி, மக்கள் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தனியார் சுகாதாரச் சேவையை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

இந்த ஒட்டுமொத்த மோதலாலும் மிகவும் பாதிக்கப்படுவது நாட்டின் அப்பாவி ஏழை மக்கள் மட்டுமே. ஏழை மக்கள் கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்லும்போது அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை, ஆய்வகப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடிவதில்லை. மக்களைப் பகடைக்காய்களாக்கி அரசியல் ஆதாயம் தேடும் இந்தச் செயல்பாட்டை அமைச்சர் உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும். சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் போன்ற அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கித் தங்களது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். முன்னைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே இவர்கள் இப்போதும் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

இத்தகைய ஊழல் அதிகாரிகளை வைத்துக்கொண்டு அமைச்சர் நடத்தும் இந்த விளையாட்டை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும். அமைச்சரின் அடக்குமுறை முடிவுகளால் மருத்துவர்கள் பணிந்துவிட மாட்டார்கள். ஒட்டுமொத்த சுகாதார அமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் செயல்பட்டால், நாட்டின் அனைத்து மருத்துவர்கள், சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய பொதுத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து அமைச்சரின் செயல்பாடுகளுக்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கும்.

சில மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது, அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பேசும் ஒரு சிறிய குழுவினர் மட்டுமே. எனவே, இந்த பூனைக்கும் எலிக்கும் இடையிலான விளையாட்டை நிறுத்திவிட்டு, மருத்துவர்களின் தொழில்சார் பிரச்சினைகளைத் தீர்க்கப் பேச்சுவார்த்தைக்கு உடனடியாக இடமளிக்க வேண்டும் என்றார்.

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய