டிக்கோயாவில் 450 குடும்பங்கள் பாதிப்பு

ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட காமிணிபுரத்தில் 300 குடும்பங்களும்இ சமநலகமவில் 150 குடும்பங்களும் என ரமரி 450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும் மாநாடு!

இறைமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். அது ஆயுதப் போராட்டமா, அறவழிப் போராட்டமா என்பதை எங்களுக்கு எதிராக யார் போர் தொடங்குகிறாரோ, அவர்தான் அந்த ஆயுதத்தைத் தீர்மானிக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதும் இலங்கை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் – அது அறவழியா, ஆயுதமா என்பதை. காலம் தான் அதற்குரிய பதிலையும் சொல்லும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். […]
சிறைச்சாலை அத்தியட்சகரின் விசேட அறிவிப்பு

மஹர சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 104 கைதிகளும், அச்சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பிலான சந்தேகநபர்கள் என மஹர சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹண களப்பத்தி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், இவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை வரை மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது மஹர […]
2 பேருந்துகள் மோதி கோர விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை – கரடுபன பகுதியில் இன்று (3) காலை 6:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து […]
கன மழை; இரும்புப் பாலத்தை சீரமைக்கும் இயந்திரங்கள் நீரில் மூழ்கின

நிலவும் அதிக மழை காரணமாக மகாவேலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், ரயில் பாதையில் அமைந்துள்ள பேராதனை களுப்பாலம் (இரும்புப் பாலம்) எனப்படும் பாலத்தை சீரமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் நீரில் மூழ்கி வருகின்றன. “தித்வா” (Ditwa) சூறாவளியால் சேதமடைந்த ரயில் பாதையைச் சீரமைப்பதில் மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது பேராதனை இரும்புப் பாலம் எனப்படும் களுப்பாலத்தைப் புனரமைக்கும் செயலாகும். கடந்த ஏழு மாதங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியானது, ஆற்றிற்குள் அமைக்கப்பட்டுச் சாய்ந்துள்ள இந்தப் பாலத்தின் தூணை மீண்டும் […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (3)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் இவ்வாறு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை […]
மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நேற்று(02) முற்பகல் மஹர சிறைச்சாலைக்குச் சென்று அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளும் இன்றைய தினம் மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்த நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளனர். குறித்த சம்பவம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகம் […]
பாலியல் வன்கொடுமை : டொராண்டோவைச் சேர்ந்த இருவர் கைது, வழக்கு பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணையில் டொராண்டோவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் ‘ப்ளூர் வீதி மேற்கு’ (Bloor Street West) மற்றும் ‘சென்ட் ஜார்ஜ் வீதி’ (St. George Street) பகுதியில் நடந்ததாகக் டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 2ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில், ‘கிங் வீதி மேற்கு’ (King Street West) மற்றும் ‘போர்ட்லேண்ட் வீதி’ (Portland Street) அருகே வைத்து […]
டொராண்டோவின் மேற்குப் பகுதியில் நபர் மீது துப்பாக்கிச் சூடு

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டொராண்டோவின் மேற்குப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, காயமடைந்த நபர் ஒருவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ‘ப்ளூர்கோர்ட் கிராமம்’ (Bloorcourt Village) பகுதியில், ‘ப்ளூர் வீதி மேற்கு’ (Bloor Street West) மற்றும் ‘டோவர்கோர்ட் வீதி’ (Dovercourt Road) அருகே இடம்பெற்றுள்ளது. கட்டிடமொன்றிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அதிகாலை 5:15 மணிக்கு முன்பாக அப்பகுதிக்குச் சென்றதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு, துப்பாக்கிக் சூட்டுக் […]
டொராண்டோ தம்பதி உயிரிழந்த படகு விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது

மஸ்கோகாவில் (Muskoka) இரண்டு பேரின் உயிரைப் பறித்த படகு விபத்துக்கான காரணம் குறித்தான விசாரணை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை வெளியிடாது எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், உயிரிழந்தவர்கள் டொராண்டோவைச் சேர்ந்த 30 வயதுப் பெண் மற்றும் 32 வயது ஆண் எனத் தெரிவித்துள்ளனர். டொராண்டோவைச் சேர்ந்த இந்த இருவர் மட்டுமே அந்தப் படகில் இருந்ததாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) ‘CTV News’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, […]