எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

‘சென்னை: கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்தச் சம்பவம் அ.தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே 6 தொகுதிகள் காலியாக உள்ள சூழலில், தற்போது கரூரும் காலியாகும் சூழல் உருவானதால், இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி […]
மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த தாய் மற்றும் காணாமல்போன மகள் ஆகிய இருவரும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு குறித்த தாயின் மகன், மீன்பிடிப்பதற்காக துபார வாவிக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடி […]
சவூதியில் ஹெலிகொப்டர் விபத்து – 14 பேர் பலி

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு நேற்று (28) விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அந்த செய்தி நிறுவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலையும் […]
பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திடீர் ஓய்வு முடிவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கும் போட்டியுடன் அவரது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் […]
எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் – ஆனந்த விஜேபால

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன.அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன. எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 54இ000 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டின் […]
இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது; ஒற்றுமை சமூகத்தை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்பு – விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது. அதில் பிரதம […]
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளநிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மேலும் இந்த […]
அரச வைத்திய அதிகாரிகள் சங்க புதிய தலைவர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்ற போதே, அவர் இந்த பதவிகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாக, சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக வைத்தியர் பண்டார வரகாகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிகளுடன் சேர்த்து, 2026/27 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் ஹிந்து-குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தானைத் தாண்டி அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் அல்லது […]
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முறையான தீர்வினைத் தரக்கூடிய தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சீர்திருத்தமே மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அவசியமான நிலையில், தற்போதைய திட்டங்களின் தெளிவற்ற தன்மையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே […]