பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு; தர்மபுரத்தில் சம்பவம்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. நேற்று (22) மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, இக்குழந்தை பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளது. தாயும் குழந்தையும் அருகிலுள்ள அயலவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது, தனது கணவருக்கு உணவு வழங்குவதற்காகக் குழந்தையை அயலவர் வீட்டிலேயே விட்டுவிட்டுத் தாய் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர், அயலவர் வீட்டில் […]

ஆடிவேல் விழா; கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ். தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று முன்தினம் (21) மாலை வந்தடைந்தது. மே மாதம் 23 ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, […]

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் கத்திக்குத்து: 40 வயது மதிக்கத்தக்க நபர் காயம்; தப்பியோடிய சந்தேக நபருக்கு வலைவீச்சு

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown Toronto) திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்ச் ஸ்ட்ரீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Church Street and Adelaide Street East) பகுதிக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 8:30 மணிக்குச் சற்றுப் பின்னதாகக் கிடைத்த அவசர அழைப்பையடுத்து டொராண்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு, கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் பொலிஸார் […]

பீல் பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை; பதவி உயர்வுகளும் ரத்து

கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் துறையில் (Peel Regional Police) பதவி உயர்வுக்கான பரீட்சை மற்றும் நேர்காணல் வழிமுறைகளின் போது, ரகசியத் தகவல்களைப் பெற்றுக் கொண்டமை மற்றும் பகிர்ந்துகொண்டமை (Cheating) அம்பலமானதைத் தொடர்ந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பீல் பொலிஸ் துறை திங்கட்கிழமை CP24 செய்தித் தளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், “பதவி உயர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை ஒரு சில பங்கேற்பாளர்களால் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் நாம் […]

பிராம்ப்டனில் கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து நபர் ஒருவர் பலி: பொலிஸார் தகவல்

திங்கட்கிழமை பிற்பகல் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் உள்ள தொழில்சார் வளாகம் ஒன்றின் கட்டுமானப் பள்ளத்தில் (Construction hole) விழுந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர். குவீன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிக்குச் சற்று தெற்கே, கிளாரன்ஸ் ஸ்ட்ரீட் அருகிலுள்ள கென்னடி ரோட் சவுத் (Kennedy Road South near Clarence Street) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழில்துறை விபத்து (Industrial accident) ஒன்று நேர்ந்துள்ளதாகப் பிற்பகல் 4:00 […]

மெல்வில் துப்பாக்கிச் சூடு: கனடிய RCMP பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயம்; சந்தேக நபர் கைது சஸ்காச்சுவான்

சஸ்காச்சுவான் (Saskatchewan) மாகாணத்தின் மெல்வில் (Melville) நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி: ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9:35 மணியளவில், மெல்வில் நகரின் ‘8வது அவென்யூ வெஸ்ட்’ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் (Assault) குறித்த புகாரையடுத்து பொலிஸார் அங்கு விரைந்தனர். அதிகாரிகள் அந்த வீட்டைச் சென்றடைந்த உடனே, அங்கிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இரண்டு […]

பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்த ஓய்வுபெற்ற அதிபர் பெருமாள் கணேசன் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

கிளிநொச்சி, ஏ – 9 பிரதான வீதியில் போலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கிளிநொச்சி போலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாடசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக […]

செம்மணி புதைகுழியில் புதிதாக 7 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 22ஆம் திகதி திங்கட்கிழமை 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று திங்கட்கிழமை (22) நடைபெற்றது. மூன்று என்புக்கூடுகள் ஒரே நேர்கோட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை , நேர்சீரின்மையாக 09 என்புக்கூடுகள் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் […]

கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் இடமாற்றம்

கொழும்பிலுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகரகம், ஸ்ரீமத் ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 07 இல் புதுப்பிக்கப்பட்ட வளாகத்துக்கு உயர்ஸ்தானிகரத்தை இடமாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரம், தற்போது அமைந்துள்ள 5 ஆவது ஒழுங்கையில் இருந்து கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீமத் ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தையில் புதுப்பிக்கப்பட்டுள்ள வளாகத்துக்கு உயர்ஸ்தானிகரகம் மாற்றப்படவுள்ளது. அதேபோன்று இந்த இடமாற்றமானது இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கங்களுடனும் பொதுமக்களுடனுமான நல்லுறவை வலுப்படுத்துவதில் கனடா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் […]

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து சார்க் பொதுச்செயலாளர் விடைபெற்றார்

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.டி. கொலாம் சர்வார் திங்கட்கிழமை (22) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து விடைபெறும் வகையிலான மரியாதை நிமித்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.டி. கொலாம் சர்வாரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் சார்க் அமைப்பின் நோக்கங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பொதுச்செயலாளர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். கொழும்பில் செவ்வாய்க்கிமை (23) நடைபெறவிருக்கும் ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான […]