“தவெக – நாம் தமிழர்” சந்திப்பு! அண்ணன் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் மூத்த அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வரும் சி. ஜோசப் விஜய், இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்திற்கு வருகை தந்த முதல்வரை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்த கையோடு, தனது “அண்ணன்” எனப் பலமுறை குறிப்பிட்ட […]
நீலாங்கரையில் அன்புமணி ராமதாஸைச் சந்தித்தார் விஜய்! அடுத்தடுத்த சந்திப்புகளால் அதிரும் அரசியல் களம்!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக மூத்த தலைவர்களைச் சந்தித்து வரும் சி. ஜோசப் விஜய், இன்று மாலை நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்குச் சென்றார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் வாசலுக்கே வந்து […]
“விஜய்க்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும்!” – எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற பின் பிரேமலதா பேட்டி!

சென்னை: விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் ரீதியாகக் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவியேற்பின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் பிரேமலதா வணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை […]
அதிமுகவில் உச்சகட்ட பிளவு! எடப்பாடிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு; தனி அணி திரட்டும் எஸ்.பி.வேலுமணி!

சென்னை: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்தடுத்து ஐந்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்ததைக் காரணங்காட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், அதிமுக-வின் 47 எம்.எல்.ஏ-க்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சட்டமன்றச் செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் அளித்துள்ள […]
தமிழக சட்டசபை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு!

சென்னை: தமிழகத்தின் 17-வது சட்டமன்ற சபாநாயகராகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுகிறார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக-வின் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர், கடந்த ஜனவரி மாதம் தவெக-வில் இணைந்தார். பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட இவரைச் சபாநாயகர் […]
“விஜய்யின் பண்பாடு வியக்க வைத்தது!” – நேரில் வாழ்த்திய வைகோ நெகிழ்ச்சி!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வைகோவின் இல்லத்திற்கு வருகை தந்த முதல்வரை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வாசலுக்கே வந்து ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார். இந்தச் சந்திப்பின் போது வைகோ, முதல்வர் விஜய்க்குப் பொன்னாடை போர்த்தித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் அரசியல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து […]
“அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்தார்!” – முதல்வருடனான சந்திப்பு குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை: தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான கலாச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சட்டசபையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற கையோடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் வருகை தந்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் வாசலுக்கே வந்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினைச் […]
காத்மண்டு விமான நிலையத்தில் தீ விபத்து

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று (11) திங்கட்கிழமை தரையிறங்கிய டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததையடுத்து, விமான நிலையம் ஒரு மணி நேரம் மூடப்பட்டதாகவும், விமானத்தில் இருந்த 288 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து 277 பயணிகள் மற்றும் 11 ஊழியர்களுடன் வந்த ‘ஏர்பஸ் ஏ330’ ரக விமானம், காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமானத்தின் வலதுபுற பின் சக்கரங்களில் தீப்பிடித்ததைக் கவனித்த […]
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பிணையில் விடுதலை

தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்கவரும், சர்ச்சைக்குரிய தலைவருமான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று (11) திங்கட்கிழமை பாங்கொக் க்ளோங் பிரேம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், 08 மாதங்கள் தண்டனையை அனுபவித்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தக்சின் விடுதலையாவதைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கூட்டாளிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சிறை வாசலில் திரண்டிருந்ததோடு, வெள்ளை நிற போலோ சட்டை மற்றும் நீல நிற கால்சட்டை அணிந்து […]
அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்

மேற்காசியவில் நீடித்து வரும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சமாதான யோசனைகளை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானின் இந்தப் பதில் தமக்கு அதிருப்தி அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் ஊடாக ஈரான் தனது உத்தியோகபூர்வ பதிலை வொஷிங்டனிடம் கையளித்துள்ளது. ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, போர் நிறுத்தத்திற்கு ஈரான் அனைத்து முனைகளிலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள […]