காவத்தை சம்பவத்துக்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து தரைமட்டமாக்கியுள்ளமைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , “தோட்டங்களில் பாதுகாப்புக் கடமைகளுக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந்தெரியாத நபர்களே, இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் குறித்துக் காவத்தை […]
“வாக்களிப்பது அடிப்படை உரிமை; தடையாக இருக்காதீர்கள்!” – 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் கேட்டு விஜய் அதிரடி கடிதம்!

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் தவித்து வருவது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது: “சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர். தேர்தல் பணிக்காகப் பெருமளவிலான […]
காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குப்பதிவு: வெயிலையும் பொருட்படுத்தாமல் குவியும் வாக்காளர்கள்!

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், ஜனநாயகக் கடமையை ஆற்ற மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் திரண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
வவுனியாவில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து ஒருவர் பலி

இன்று (23) காலை வவுனியா திருநாவற்குளம் பகுதியில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஊடகவியலாளரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டும், மற்றொருவர் காயமடைந்தும் உள்ள நிலையில், இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் லெபனான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய அமல் கலீல் (Amal Khalil) கொல்லப்பட்டார்; சுயாதீன புகைப்படக் கலைஞர் ஜைனப் ஃபராஜ் (Zeinab Faraj) காயமடைந்தார். தங்களுக்கு முன்னால் சென்ற வாகனம் முதல் வான்வழித் தாக்குதலில் சிக்கி இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஊடகவியலாளர்கள் தஞ்சம் […]
மாற்றத்தை உருவாக்குவது நம் கையில்! தனது வாக்கை பதிவு செய்த பின் சீமான் உருக்கம்

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதியின் வேட்பாளருமான சீமான், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி கயல்விழியும் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் […]
திறைசேரி கணினி கட்டமைப்பு ஊடுருவல்: மின்னஞ்சல் ஊடாக நிதி திருடப்பட்ட விபரம் அம்பலம்

நிதி அமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஊடுருவி மேற்கொண்ட நிதி திருட்டு குறித்து சட்ட அமலாக்க முகவர் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் (Australian Export Finance Agency) இலங்கை திறைசேரிக்கும் இடையில் கடன் தவணை செலுத்துதல் தொடர்பாக மின்னஞ்சல் (Email) வாயிலாகத் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இந்தத் தொடர்பு வழியைப் பயன்படுத்திய ஹேக்கர்கள், தகவல்களைச் […]
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்; ஆயுதங்களை வைத்து சிக்கவைக்க சதி – விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைநீதிமன்றத்தில் அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பல சாட்சிகள் தங்கள் சாட்சியங்களைத் திரும்பப் பெறுமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை வைத்து சிக்கவைக்கும் சதி: கடந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஒரு சாட்சியின் வீட்டிற்குச் சென்ற இராணுவப் […]
தெற்கில் தமிழர் விரோத அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தெற்கில் தமிழர் விரோத அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செய்யமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தி இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஊடாக 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குற்காட்டுவான் இறங்குதுறை புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் […]
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்; 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகளுடன் சர்வதேச குழு வருகை

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகளைக் கொண்ட சர்வதேசக் குழு சென்னையில் நேற்று பார்வையிட்டது. தமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம், புதுடெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் இந்தத் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் 2-ம் கட்டத்தில் சர்வதேச ஜனநாயக […]