முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலி இன்று நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலி மற்றும் ஏனைய இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. சந்தேக நபரான சுரேஷ் சாலி தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், […]
“அன்புமணி தரப்புக்கு அதிரடி தடை!” – தேர்தல் பரப்புரையில் ராமதாஸ் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை!

சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையேயான அரசியல் போர் நீதிமன்றப் படிகளேறியுள்ள நிலையில், இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் பரப்புரையின் போது டாக்டர் ராமதாஸின் பெயர் மற்றும் புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தடை கோரப்பட்டிருந்தது. இந்த […]
பயங்கரவாத நிதி வழிகளைத் தடுக்க இலங்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது

இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பை, ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ (Targeted Financial Sanctions – TFS) மூலம் பலப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ என்பது பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாகும். இவர்களின் சொத்துக்களை முடக்குதல், நிதிச் அமைப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவர்கள் நாட்டிற்குள் எந்தவொரு நிதி நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதைத் […]
2025 ஆம் ஆண்டை விட 2026 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் – பேராசிரியர் பிரியங்க துனுசிங்க

இலங்கையின் 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை விட, 2026 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வளர்ச்சி வீதம் குறைவாகவே இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற அததெரண ‘பிக் போக்கஸ்’ (Big Focus) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பேராசிரியர் துனுசிங்க தனது உரையில் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள்: அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாப் […]
வாக்களிக்கச் சொந்த ஊர் திரும்பும் மக்கள்! பண்டிகைக் காலத்தைப் போல அலைமோதும் கூட்டம்: கிளாம்பாக்கத்தில் பயணிகள் திணறல்!

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மாலை முதலே தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களைப் போல மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து […]
நாமல் இங்கிலாந்தில் பெரிய சொத்து வைத்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியோரை இலக்கு வைத்து அப்பட்டமான பிரசாரங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தார். நாமல் இங்கிலாந்தில் இவ்வளவு பெரிய சொத்தை வாங்கியிருந்தால் அங்குள்ள புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் சட்டவிரோதப் பணமாக […]
திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிறிதரன், நித்தியராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற குணரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், ஐஸ்வரியா அவர்களின் அன்புக் கணவரும், ஜாகவி, ஆழினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சுஜந்தினி, சுதர்சன், மயூரன், நிரோஜன், தயாபரி, யசோதரன், யாழினி, சர்மிளா, உஷானி, […]
சடலமாக மீட்கப்பட்ட விவசாயியுடைய பிரேத பரிசோதனை வெளியீடு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர் தோட்டத்தில் […]
பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் – பிரதமர்

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]
சிறப்பு விசாரணையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு அறிவிப்பு இன்னமும் வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை மேற்கொள்ளவதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும் என்பதுடன் சட்டத்தை மீறும் செயலாகும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் […]