பிராம்ப்டனில் துப்பாக்கிச் சூடு; வாகனக் கடத்தல் முயற்சி!

பிராம்ப்டன் நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற வாகனக் கடத்தல் (Carjacking) முயற்சியின் போது, இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கடந்த ஏப்ரல் 6-ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில், பிராம்ப்டனின் சென்ட்ரல் பார்க் டிரைவ் (Central Park Drive) மற்றும் கிளென்வேல் புலிவார்ட் (Glenvale Boulevard) சந்திப்பிற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு சந்தேகநபர்கள் சேர்ந்து […]

குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் – பல்கலைக்கழக மாணவர் பலி

ஹோமாகம – மொரகஹஹேன வீதியில் அமைந்துள்ள விடுதியில், தனியார் பல்கலைக்கழக மாணவர் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெல்லவாவை சேர்ந்த 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு அந்த விடுதியில் இரு மாணவர் குழுக்களும் விருந்து நடத்தியிருந்தன. அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தக் கொலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]

இலங்கை வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் நகரசபை உறுப்பினராகத் தெரிவு!

பிரான்ஸின் கயன்கோர்ட் (Guyancourt) நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் (Bilaal Lookman) நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் (Paris-Panthéon-Assas) பல்கலைக்கழகத்தில் முதலாம் […]

அதிக விலைக்கு உணவு; ரயில்களில் திடீர் சுற்றிவளைப்பு?

ரயில்கள் மற்றும் ரயில் நிலைய சிற்றுண்டிச்சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியல் இன்றி வியாபாரம் செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தி, நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாவட்ட உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘மீனகயா’ இரவு நேர […]

வங்கி நிதி மோசடி; அரசாங்க நிதிப் பற்றிய குழு அவதானம்

NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆராயப்பட்டுள்ளது. அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் இந்தக் குழு அண்மையில் கூடிய போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க, அதன் ஆளும் சபை, நாணயக் கொள்கைச் சபை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய […]

ஒஷாவா பொலிஸ் நிலையத்தில் வன்முறை: இரண்டு அதிகாரிகள் படுகாயம்; ஒருவர் கைது

டர்ஹாம் பிராந்திய பொலிஸ் பிரிவின் (Durham Regional Police) மத்திய கிழக்குக் கிளையில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில், ஒஷாவாவின் சென்டர் வீதியில் (77 Centre St. N) அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதல்: பொலிஸார் மட்டுமே செல்லக்கூடிய பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த […]

டொராண்டோவில் வாகன மோதல்: பாதசாரி படுகாயம்

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த செய்தி விவரம். டொராண்டோ நகரின் மேற்குப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காலை சுமார் 7:56 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்லெட் வீதி (Scarlett Road) மற்றும் லோரன்ஸ் அவென்யூ வெஸ்ட் (Lawrence Avenue West) சந்திப்புப் பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த […]

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் நட்டம்?

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் சுமார் 100 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், இவ்வளவு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து, இன்று பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டி.வி. சானக்க இதனைத் […]

முடிந்தவரை விரைவில் லெபனானுடன் நேரடிப் பேச்சு – நெதன்யாகு

லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு லெபனானிடமிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, நேற்று தனது அமைச்சரவையிடம் இதனை அவர் கோரியதாக ‘X’ தளத்தில் ஹீப்ரு மொழியில் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுத பாணியாக்குதல் மற்றும் இஸ்ரேல் – லெபனான் இடையே அமைதியான உறவுகளை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காயங்கள் காரணமாக ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கமல் கராசி உயிரிழந்தார். இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியல் சூழலில் ஒரு சீர்திருத்தவாத அரசியல்வாதியாக அறியப்பட்ட கராசி, ஈரானின் வெளியுறவு மூலோபாயக் குழுவின் தலைவராகவும், ஈரானின் மறைந்த அதி உயர் தலைவர் அலி கமேனியின் ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார். 1997 முதல் 2005 வரை ஈரானின் வெளியுறவுத்துறை […]