கனடா தபால் சேவை வீட்டு விநியோகத்தை நிறுத்தத் திட்டம்?

கனடாவின் அரச நிறுவனமான கனடா போஸ்ட் (Canada Post), வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கடிதங்களை வழங்கும் ‘டோர்-டு-டோர்’ (Door-to-door) சேவையை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதிலாக ‘சமூக அஞ்சல் பெட்டிகள்’ (Community Mailboxes) முறையை நடைமுறைப்படுத்த அந்நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. மாற்றத்திற்கான காரணம்: கனடா போஸ்ட் தற்போது சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் செயல்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளவே இந்த ‘மாற்றத் திட்டம்’ (Transformation Plan) கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சுமார் 4 மில்லியன் முகவரிகளுக்கு […]
70 மில்லியன் ஈரானியர்கள் தாயகத்தைப் பாதுகாக்கத் தயார் – ஈரான் சபாநாயகர்

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் (Mohammad-Bagher Ghalibaf), அமெரிக்கப் பொதுமக்களுக்கு விடுத்துள்ள உருக்கமான மற்றும் ஆக்ரோஷமான செய்தியில், நவீன கால சமூக ஊடகப் போர் முறையைப் பயன்படுத்தித் தனது நாட்டின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். தனது உரையை “கவனிங்கள்” (Listen up) என்று தொடங்கிய காலிபாஃப், 1980-களில் ஈராக் – ஈரான் போரின் போது தனது சகோதரரை யுத்த களத்தில் இழந்ததைத் தனிப்பட்ட உதாரணமாகக் குறிப்பிட்டார். “நாங்கள் எமது நேசத்திற்குரிய மண்ணுக்காக எமது அனைத்தையும் – எங்களிடம் […]
டெட்ராய்டில் செயற்பட்டு வந்த சர்வதேச கார் திருட்டு கும்பலைக் கண்டுபிடிக்கப்பட்டது!

டெட்ராய்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த 40 மில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச கார் திருட்டு கும்பல் முறியடிக்கப்பட்டது. இதில் சுமார் 400 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. டியர்பார்ன் (Dearborn) பகுதியில் நடந்தது வெறும் திருட்டுச் சம்பவம் மட்டுமல்ல—இது வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு அழைப்பாகும். சுமார் 40 மில்லியன் டாலர் மதிப்பிலான 400 உயர்தர (High-end) வாகனங்களைத் திருடி ஏற்றுமதி செய்த விரிவான சர்வதேச வலைப்பின்னலை அதிகாரிகள் தகர்த்துள்ளனர். இது டெட்ராய்ட் பகுதியை […]
இன்று மலையகத்தில் கடும் மழை

மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (02) மாலை வேளையில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடும் மழை காரணமாக சில இடங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நில பகுதிகளில் வெள்ளநீரும் தேங்கியுள்ளது. குறிப்பாக புசல்லாவை, கண்டி, பேராதனை, மாத்தளை, மடவளை, வத்தேகம, உக்குவலை, பன்விலை, கபரகலை, நெல்லிமலை மற்றும் கோமரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]
தமிழர் விவகாரங்களை கையாள மலையக விவகார இணைப்பாளர் நியமனம்!
இந்திய வம்சாவளி மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழர் விவகாரங்களை கையாள, ஜனாதிபதி செயலகத்தில் ஒரு உயர் மட்ட இணைப்பதிகாரியை நியமியுங்கள் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது காரியாலய பிரதம அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தீயை, மலையக விவகார இணைப்பாளராக நியமித்தார். டிட்வா மலையக பேரழிவு, காணி உரிமை, மலையகத்தில் தொடர்மாடி நிராகரிப்பு, 50 இலட்ச வீட்டுரிமை, இந்திய வீடமைப்பு திட்டம், தொழிலாளர் […]
இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட “குஷ்” ரக போதைப்பொருள் கைப்பற்றல்!

சுமார் 25 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான “சிவப்பு வழி” (Red Channel) ஊடாக வெளியேற முயன்ற இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (02) பிற்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன், அவர் மோட்டார் சைக்கிள் புகையிரைச்சலை தடுக்கும் கருவிகளை (Silencers) பழுதுபார்ப்பவர் என தெரியவந்துள்ளது. […]
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC), தேசிய பந்துவீச்சு பயிற்சியாளராக ரையன் வான் நீகெர்க் (Ryan van Niekerk) என்பவரையும், தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோர்டான் கிரிகோரி (Jordan Gregory) என்பவரையும் நியமித்துள்ளது. ரையன் வான் நீகெர்க் இதற்கு முன்னர், 2023 முதல் 2026 வரையான காலப்பகுதியில் நெதர்லாந்து தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், இடைக்கால தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது புதிய பொறுப்பில், தேசிய ஆண்கள் அணி உட்பட அனைத்து தேசிய அணிகளினதும் வேகப்பந்துவீச்சு […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம் 6 இல் வகுப்பில் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் பின்னர் தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்ற இச்சிறுவன் பிரதான வீதியைக் கடக்கின்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாகத […]
கனடாவின் காவல்துறையில் பணியாற்றிய தமிழர் காலமானார்!

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையில் பணியாற்றிய பிரசாந்த் இந்திரலிங்கம் உடல்நலக் குறைபாடு காரணமாக காலமாகிவிட்டதை மிகுந்த துயரத்துடன் மேற்படி காவல்துறையின் சமூக வலைத்தளம் பதிவிட்டுள்ளது. 22வது பிரிவு B பிளாட்டூனில் பணியாற்றிய கான்ஸ்டபிள் பிரசாந்த் இந்திரலிங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பீல் பிராந்திய காவல்துறையில் இணைந்தவர். வெறும் 30 வயதிலேயே இளமையான கடினமாக உழைக்கும் அர்ப்பணிப்புள்ள அதிகாரியாக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் பிரசாந்த் இந்திரலிங்கத்தை இவ்வளவு விரைவாக இழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது […]
குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் மனித உடலின் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அவ்விடத்தில் அகழும் பணி நேற்று(01.04.2026) மாலையோடு கைவிடப்பட்டு அப்பகுதி மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளோடு முதலாவதாக தோண்ட்டப்பட்ட இடம் கைவிடப்பட்டு மூடப்படுகின்ற நிலையில் அகழ்வுப் பணியும் நேற்றோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அப்பகுதியில் சந்தேகிக்கப்படும் ஏனைய இடங்களில் […]