2008-2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை – முன்னாள் கடற்படை தளபதியை மீண்டும் பிரதிவாதியாக இணைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

2008-2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை மீண்டும் பிரதிவாதியாக இணைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்த சந்தேக நபரான லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டி ஆராச்சிக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வசதி செய்து கொடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியுமான ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவிக்க 2020 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் அனுமதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2021 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, அவர் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு (நேவி சம்பத்) அடைக்கலம் கொடுத்ததாக விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் 2018 நவம்பரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், டிசம்பர் 2018 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல நிதியுதவி செய்ததாகவும், விசாரணைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அப்போது குற்றம் சாட்டியிருந்தது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, இரண்டாவது சந்தேக நபர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுகளைச் செய்திருந்தார். லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கும், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கும் உதவியதாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அத்மிரல் விஜேகுணரத்ன விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னைய நீதவான் வழங்கிய விடுவிப்பு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் குறித்து நீண்ட விசாரணை நடத்திய கௌரவ நீதவான் நீதிமன்றம், அந்த விடுவிப்பு உத்தரவில் குறைபாடுகள் உள்ளதாகத் தீர்மானித்தது. இதன்படி, ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் ஒரு சந்தேக நபராக (பிரதிவாதியாக) பெயரிட்டு, அவருக்கு எதிரான உரிய குற்றப்பத்திரிகைகள் மற்றும் முறைப்பாடுகளைத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

திறந்த நீதிமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை விரிவாக அறிவித்த நீதவான், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்