விடுதலைப் புலிகள் சார் குழுக்களும் அரசுமே மஹிந்த, நாமல் மீது அவதூறுப் பழிசுமத்துகிறார்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். மஹிந்த, நாமல் மீது அவதூறாக பழிசுமத்துவது அரசாங்கமும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களுமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.

அவதூறுகளுக்கு எதிராக திங்கட்கிழமை (13) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தோம். நாமல் ராஜபக்ஷவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு பொய்ப் பிரசாரம் கொண்டு செல்லப்படுகிறது. நான் அது குறித்த மேலதிக விபரங்களை இந்தத் தருணத்தில் கூறப்போவதில்லை. ஏனெனில், ஒருபுறம் அது அவசியமற்ற பிரசாரத்துக்கு வழிவகுக்கும், மறுபுறம் நாம் இன்று கையளித்த முறைப்பாட்டின் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி திட்டமிட்ட முறையில் இரு பிரதான தரப்பினரே அவதூறான பழிசுமத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதலாவது தரப்பினர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குச் சார்பான முகாம்களாகும். மாலிமாவைக் கேந்திரமாகக் கொண்டு இயங்கும் சமூக ஊடக கணக்குகள் மூலமே இந்தத் திட்டமிட்ட பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

அடுத்ததாக, சமூக ஊடகங்கள் ஊடாகத் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் இதே பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. குற்றவியல் ஆய்வுகளின்படி, கொலை செய்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல், கொள்ளையடித்தல், கடத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவையே பாதாள உலகக் குழுக்களின் பிரதான செயற்பாடுகளாகும். எமக்குச் சேறுபூசும் இந்த இரு தரப்பினரின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இந்த அனைத்துக் குற்றங்களிலும் ஈடுபட்டதற்கான சான்றுகள் இந்நாட்டு வரலாற்றில் பதிவாகியுள்ளன.

அரசாங்கத் தரப்பினர் போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிக் பேசினாலும், கடந்த ஒன்றரை வருட காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கிக் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இந்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பாதாள உலகக் குற்றச் செயல்களும் முழுமையாக அடக்கப்பட்டன என்பதே உண்மையான வரலாறாகும். முகநூல் போலி கணக்குகள் மூலமோ அல்லது பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல், தைரியமிருந்தால் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கிறோம் என்றார்.

de

டெங்கு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

July 26, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று

wea

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

July 26, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால்

vehicle

1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்

July 26, 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என

kas

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

July 26, 2026

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்

jud_1

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

July 26, 2026

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த

sri-lanka-tourism

138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

July 26, 2026

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

chamara

தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

July 26, 2026

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்