ரஷ்யா மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் கடும் குளிரை எதிர்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த இடைவேளையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கீவ் நகரில் பல பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் “தனிப்பட்ட வேண்டுகோளுக்கு” இணங்க, உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை வரை நிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்திருந்தது.

2022 பெப்ரவரியில் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அபுதாபியில் நடைபெற்ற முதலாவது முத்தரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கீவ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கீவ் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகசென்கோ (Tymur Tkachenko) டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, கிழக்கு உக்ரைனில் உள்ள டினிப்ரோ (Dnipro) நகரமும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் எரிசக்தி நிலையங்கள் அல்லது முக்கிய நகரங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியிருந்தாலும், தளவாடப் போக்குவரத்து வழிகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அடுத்த சுற்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அபுதாபியில் நடைபெறும் என்பதை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்